சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை

இன்று 24-08-25
  

சென்­னை­யில், மாநில – ஒன்­றிய அர­சு­க­ளின் உற­வு­கள் குறித்து, ஆய்வு செய்­வ­தற்­கான குழு ஏற்­பாடு செய்­தி­ருந்த, தேசிய கருத்­த­ரங்­கில், துணை முத­ல­மைச்­சர்

உத­ய­நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.

அப்­போது அவர், ``அர­சி­யல மைப்­புச் சட்­டம் உறு­திப்­ப­டுத்­திய மாநில சுயாட்சி உரி­மை­களை, முழு­வ­து­மாக நிலை­நாட்­டி­டும் வரை, தமிழ்­நாடு முன் வ­ரி­சை­யில் நின்று போரா­டும் – வெல்­லும்’’ என்று குறிப்­பிட்­டார்.

துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு:

மாநில மற்­றும் ஒன்­றிய அர­சின் உற­வு­கள் குறித்த, இந்த இரண்டு நாள் கருத்­த­ரங்­கத்­தின் நிறைவு விழா­வில், உங்­களை எல்­லாம் சந்­தித்து, உங்­க­ளு­டன் உரை­யாற்று வதில் மிகுந்த மகிழ்ச்­சி­யும், பெரு­மை­யும் அடை­கி­றேன்.

சர்­வா­தி­கா­ரப் போக்கு

ஒன்­றிய அர­சின் சர்­வா­தி­கா­ரப் போக்­கு­க­ளால் மாநி­லங்­க­ளின் உரி­மை­கள் கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்ற இந்த நேரத்­தில், சரி­யான தரு­ணத்­தில் இந்த முக்­கி­ய­ மான நிகழ்வை, நாம் நடத்­திக்­கொண்டு இருக்­கி­றோம். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கொள்­கை­க­ளில் ஒன்­றான, முக்­கி­ய­மான முழக்­கம் `மாநில சுயாட்சி’. பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர், முர­சொலி மாறன், நம் திரா­விட இயக்­கத் தலை­வர்­கள் அனை­வ­ரும் மாநில சுயாட்சி முழக்­கத்தை உயர்த்­திப் பிடித்­த­வர்­கள்.

2021–ஆம் ஆண்டு நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் நம் முதல மைச்­சர் அவர்­கள் பொறுப்­பேற்­ற­தில் இருந்து, டெல்­லி­யில் உள்ள அரசை நாம் `மத்­திய அரசு’ என்று அழைப்ப தில்லை. `ஒன்­றிய அரசு’ என்­று­தான் அழைத்­துக்­கொண்டு இருக்­கி­றோம். நாம் ஒன்­றிய அரசு என்று அழைக்­கத் தொடங்­கி­ய­தும், பலர் பதறி விட்­டார்­கள், பலர் எதிர்த்­தார்­கள். அப்­போது நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் சட்­ட­மன்­றத்­தி­லேயே மிகத் தெளி­வாக ஒரு விளக்­கத்­தைச் சொன்­னார்­கள்.

அண்­ணல் அம்­பேத்­கர்

இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில், `யூனி­யன் அண்டு ஸ்டேட்’ என்­று­தான் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. யூனி­யன் கவர்ன்­மென்ட் என்­பதை, மத்­திய அரசு என்று மொழி­பெ­யர்ப்­பது சரி­யா­ன­தாக இருக்­காது, அது தவறு என்று சட்­ட­மன்­றத்­தி­லேயே விளக்­கி­னார்­கள். இதை அர­சி­யல் சட்­டத்­தில் எழு­திய அண்­ணல் அம்­பேத்­கர் அவர்­கள் தெளி­வா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.

ஒன்­றிய அர­சும், மாநில அர­சும் ஒருங்­கி­ணைந்து செயல்­பட வேண்­டுமே தவிர, ஒன்­றிய அர­சுக்கு மாநில அரசு கீழ்­ப­டிந்து செயல்­ப­டக்­கூ­டாது என்­ப­து­தான் அவர் சொன்ன தெளி­வுரை. இந்த புரி­தல் எல்­லோ­ருக்­கும் ஏற்­பட்­டாக வேண்­டும். அப்­படி புரிந்­து­கொண்ட கார­ணத்­தால்­தான் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், ஆட்­சிக்கு வந்­த­வு­டன் மாநில சுயாட்சி முழக்­கத்தை கையில் எடுத்­தது. மாநி­லங்­க­ளுக்கு அதி­கா­ரங்­க­ளைத் தரும் வகை­யில் இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் திருத்­தப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது. இப்­போ­தும் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றோம். அது நடக்­கும் வரை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் நிச்­ச­ய­மாக வலி­யு­றுத்­திக்­கொண்டே இருக்­கும்.

இரா­ஜ­மன்­னார் குழு

முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் 1969–இல் முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்­றப்­போது, டெல்­லிக்­குச் சென்ற முதல் பய­ணத்­தி­லேயே மாநில சுயாட்சி பற்­றித்­தான் பேசி­னார். அதன்­படி பின்­னா­ளில் நீதி­ய­ர­சர் இரா­ஜ­மன்­னார் தலை­மை­யில் குழு ஒன்­றை­யும் அமைத்­தார் கலை­ஞர் அவர்­கள். அந்­தக் குழு அளித்த அறிக்­கை­ யின்­படி, 1974–ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத்­தில் மாநில சுயாட்­சித் தீர்­மா­னத்­தை ­யும் நிறை­வேற்­றிக் காட்­டி­ய­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.

இரா­ஜ­மன்­னார் குழு அறிக்­கை­யை­யும், சட்­ட­மன்­றத்­தில் நிறை­வே ற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தை­யும் இந்­தி­யா­வில் உள்ள பல மாநில முத­ல­மைச்­சர்­க­ளி ­டம் கொண்டு சேர்த்­தார் கலை­ஞர் அவர்­கள். மாநில சுயாட்சி கொள்­கைக்கு இந்­தியா முழு­வ­தும் ஆத­ரவு திரட்­டி­ய­வர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள். அதே­போல, மாநில சுயாட்சி கோரிக்கை என்­ப­தையே தவறு, பிரி­வினை என்று சிலர் நம்­மைப் பார்த்து விமர்­சித்­தார்­கள். அவர்­க­ளுக்­கெல்­லாம் பதில் சொல்­வ­தைப்­போல கலை­ஞர் ஒரு முழக்­கத்தை அறி­வித்­தார்­கள். அது­தான் `மாநி­லத்­தில் சுயாட்சி, மத்­தி­யில் கூட்­டாட்சி’ என்­கிற முழக்­கம். அந்த முழக்­கம் இன்­றும் தொடர்ந்­து­கொண்டு இருக்­கி­றது.

அத­னால்­தான் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஒன்­றிய– மாநில அர­சு­க­ளுக்கு இருக்­கின்ற உறவு குறித்து ஆராய, `ஹை லெவல் கமிட்டி டூ ஸ்டடி யூனி­யன் ஸ்டேட் ரிலே­சன்­ஷிப் (High level committee to study union state relationship) என்­கிற உயர்­நி­லைக் குழுவை இன்று அமைத்­துள்­ளார்­கள். ஒன்­றிய அரசு, மாநில அர­சின் உற­வு­கள் எப்­படி இருக்க வேண்­டும் என்­ப­தைப் பற்றி நம் இன­மா­னப் பேரா­சி­ரி­யர் அவர்­கள் அவ­ருக்கே உரிய பாணி­யில் ஒரு உதா­ர­ணத்­தைச் சொல்லி இருக்­கி­றார். அதை இங்கு நினை­வு­கூற விரும்­பு­கி­றேன்.

பெரிய முள் – சிறிய முள்

ஒரு கடி­கா­ரத்­தில் மணி­யைக் காட்­டு­கின்ற முள் முதன்­மை­யா­னது என்­றா­லும், நிமி­ட­முள் பெரிய அளவு இயங்­கி­னால்­தான், அந்த மணி முள் சிறி­த­ளவு இயங்­கும். அதே­மா­திரி மிக நெருக்­க­மாக இருக்­கின்ற மாநில அரசு பெரிய அளவு இயங்க வேண்­டும். மத்­திய அரசு அதற்கு இணக்­க­மாக, அள­வு­டன் இயங்க வேண்­டும் என்று அரு­மை­யா­கச் சொன்­னார் நம் பேரா­சி­ரி­யர் அவர்­கள்.

ஆனால், இப்­போது ஒன்­றிய அரசு என்ன செய்­கி­றது என்று பார்த்­தால், அதி­கா­ரத்தை மேல்­மே­லும் குவித்­துக்­கொண்டு இந்­தியா என்ற கடி­கா­ரத்­தில் மணி முள் மட்­டும் இருந்­தால் போதும், நிமிட முள்ளே தேவை­யில்லை என்ற அள­விற்கு ஒன்­றிய அரசு செயல்­பட்டு வரு­கி­றது. சில நாட்­க­ளுக்கு முன்­பு­கூட நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு மசோ­தாவை அவ­ச­ர­மா­கத் தாக்­கல் செய்­தார்­கள். மாநில அமைச்­சர்­கள் மீதும், அமைச்­சர்­கள் மீதும் ஒரு குற்­றத்­தைச் சுமத்தி 30 நாட்­கள் அவர்­களை காவ­லில் வைத்­து­விட்­டால் போதும், அந்­தக் குற்­றம் நிரூ­பிப்­ப­தற்கு முன்பே மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முத­ல­மைச்­ச­ராக இருந்­தா­லும், அமைச்­சர்­களை பத­வி­யில் இருந்து நீக்­க­லாம் என்ற மசோ­தாவை ஒன்­றிய உள்­துறை அமைச்­சர் அவர்­கள் தாக்­கல் செய்­துள்­ளார். இது மாநில அர­சு­க­ளுக்கு மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்த இந்­திய ஜன­நா­யத்­திற்­கும் விடுக்­கப்­பட்­டுள்ள ஒரு பகி­ரங்க மிரட்­டல். அந்த மசோதா சட்­ட­மா­வதை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் எந்த காலத்­தி­லும் அனு­ம­திக்­க­மாட்­டார்.

இந்­திய அர­சி­யல் சட்­டத்­தில், மாநி­லப் பட்­டி­ய­லில் உள்ள அதி­கா­ரங்­களை எல்­லாம் பொதுப் பட்­டி­ய­லுக்கு மாற்றி வரு­கி­றார்­கள். குறிப்­பாக, மாநி­லப் பட்­டி­ய­லில் உள்ள கல்வி உரி­மையை நம்­மி­டம் இருந்து பறிக்க முயற்­சிக்­கி­றார்­கள். கல்வி தொடர்­பாக, மாநில சட்­ட­மன்­றங்­க­ளைப் புறக்­க­ணித்­து­விட்டு ஒன்­றிய அரசே தங்­கள் சட்­டங்­களை இயற்றி வரு­கி­றார்­கள். அதை எதிர்த்­துத்­தான் கல்­வியை மீண்­டும் மாநி­லப் பட்­டி­ய­லுக்­குக் கொண்டு வர வேண்­டும் என்று நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடர்ந்து உரி­மைக் குரலை எழுப்பி வரு­கி­றார்­கள்.

அதற்­கான தொடக்­க­மா­கத்­தான் மாநில கல்­விக் கொள்­கையை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் வெளி­யிட்­டார்­கள். ஒன்­றிய அர­சின் புதிய கல்­விக் கொள்­கையை, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆரம்­பத்­தி­லி­ருந்தே எதிர்த்து வந்­தார். ஒன்­றிய அமைச்­சர் அந்த புதிய கல்­விக் கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டால் மட்­டும்­தான், நம் மாநி­லத்­திற்கு வர­வேண்­டிய கிட்­டத்­தட்ட 2 ஆயி­ரத்து 500 கோடி ரூபாயை விடு­விக்க முடி­யும் என்று ஒன்­றிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் சொன்­னார்.

தலை­வர் சூளுரை

புதிய கல்­விக் கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டால், தமிழ்­நாட்­டிற்­குல் குலக்­கல்வி வரும். அதா­வது அப்­பா­வும் அம்­மா­வும் என்ன வேலை பார்க்­கி­றார்­களோ, அப்­பா­வும் தாத்­தா­வும் என்ன வேலை பார்க்­கி­றார்­களோ அதே தொழிலை நாமும் செய்ய வேண்­டிய நிலை­மைக்கு, நம்­மைத் தள்ள அந்­தக் கொள்­கை­கைக் கொண்­டு­வ­ரப் பார்க்­கி­றார்­கள்.

அது­மட்­டு­மல்ல, மும்­மொ­ழிக்­கொ ள்­கையை ஏற்­றுக்­கொண்­டால்­தான் 2 ஆயி­ரத்து 500 கோடி ரூபாய் கொடுப்­போம் என்­றுச் சொல்­கி­றார்­கள். அதன் மூலம் இந்­தியை குறுக்கு வழி­யில், தமிழ்­நாட்­டிற்­குள் திணிக்­கப் பார்க்­கி­றார்­கள். அதை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் மிகத் தெளி­வாக எதிர்த்­தார்.

“நீங்­கள் புதிய கல்­விக் கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டால்­தான் 2 ஆயி­ரத்து 500 கோடி ரூபாய் கொடுப்­பேன் என்று சொல்­கி­றீர்­கள். ஒன்­றிய அரசு எங்­க­ளுக்கு 10 ஆயி­ரம் கோடி ரூபாய் கொடுத்­தா­லும், எந்த காலத்­தி­லும் புதிய கல்­விக் கொள்­கையை, தமிழ்­நாட்டு மக்­க­ளி­டம் நான் கொண்டு செல்ல மாட்­டேன்’’ என்று எதிர்த்து சூளு­ரைத்­த­வர்­தான் நம் தலை­வர் அவர்­கள்.

இத­னால் மாநில அர­சுக்கு பல்­வேறு வழி­க­ளில் கடன் நெருக்­கடி உள்­ளா­கி­றது. வரு­மான வரி, சுங்க வரி, நிறு­வன வரி, இப்­போது புதி­தாக ஜி.எஸ்.டி. என்று அனைத்து வள­மான வரி­க­ளை­யும் ஒன்­றிய அரசு எடுத்­துக் கொள்­கி­றது. மாநி­லங்­களை நிதிக்­காக கையேந்த வைக்­கும் அமைப்­பாக மாற்றி விட்­டார்.

மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­தல்

தொகுதி மறு­வ­ரை­யறை என்று ஒன்­றைக் கொண்டு வந்­துள்­ளார்­கள். தமிழ்­நாடு போன்ற மக்­கள் தொகை­யைக் கட்­டுப்­ப­டுத்­திய மாநி­லங்­க­ளின் மக்­க­ள­வைத் தொகு­தி­யைக் குறைக்­கின்ற வேலை­யை­யும் ஒன்­றிய அரசு செய்து வரு­கி­றது. ஏற்­கெ­னவே, தேர்­தல் ஆணை­யத்­தின் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­கள் ஒவ்­வொரு நாளும் வந்­து­கொண்டு இருக்­கி­றது.

ஓட்­டுத் திருட்டு என்­பது இந்­திய ஜன­நா­ய­கத்­திற்கே ஒரு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லாக இருக்­கி­றது. எதிர்த்து கேள்வி கேட்­கும் மாநி­லங்­க­ளுக்கு போது­மான நிதியை ஒன்­றிய அரசு தர மறுக்­கி­றது. அதை­யெல்­லாம் மீறித்­தான் மாநில உரி­மை­களை நாம் நிலை­நாட்ட வேண்­டிய நிலை­யில் நாம் இருக்­கி­றோம்.

இருக்­கின்ற அதி­கா­ரங்­களை வைத்­துக்­கொண்டே தமிழ்­நாட்டை பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் இன்­றைக்கு இந்­தி­யா­வில் நம்­பர் 1 மாநி­ல­மாக நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் மாற்­றிக்­காட்டி இருக்­கி­றார்­கள்.

பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் அன்­றைக்கே தெளி­வா­கச் சொன்­னார். State autonomy is a Political demand, but it is not a demand of anyone political party என்­றுச் சொன்­னார். பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் சொன்­ன­தைப்­போல இது ஒரு அர­சி­யல் கட்­சி­யின் கோரிக்கை இல்லை. மாநில சுயாட்சி என்­பதே ஒரு அர­சி­யல் கோரிக்­கை­தான். இந்த கோரிக்­கை­யில் உள்ள நியா­யத்தை எல்­லோ­ரும் புரிந்­து­கொள்­ளும் வகை­யில், காலை­யி­லி­ருந்து இன்று பல்­வேறு தலைப்­பு­க­ளில் பல அறி­ஞர் பெரு­மக்­கள் உங்­க­ளி­டம் உரை­யாற்றி இருக்­கி­றார்­கள்.

இந்த உரை­கள் எல்­லாம் மாநில உரி­மைப்­போர் வர­லாற்­றில் மிக மிக முக்­கி­ய­மான ஆவ­ணங்­க­ளாக மாறி இருக்­கின்­றன. இந்­தக் கருத்­த­ரங்­கம் இன்­றைகு தமிழ்­நாட்­டிற்கு மட்­டு­மின்றி, ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வில் உள்ள அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நிகழ்­வாக நிச்­ச­யம் அமை­யும்.

இந்­தக் கருத்­த­ரங்கை மிகச் சிறப்­பாக ஏற்­பாடு செய்த அத்­த­னைப் பேருக்­கும் எனது பாராட்­டு­க­ளை­யும், வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். மாநில சுயாட்­சியை வென்­றெ­டுப்­போம், வாழ்க தமிழ்­நாடு. நன்றி, வணக்­கம்.

பங்­கேற்­றவர்­கள்

அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு, குழு­வின் தலை­வ­ரும், உச்ச நீதி­மன்ற முன்­னாள் நீதி­ப­தி­யு­மான குரி­யன் ஜோசப், உச்­ச­நீ­தி­மன்ற மூத்த வழக்­க­றி­ஞர் சஞ்­சய் ஹெக்டே, உயர்­மட்­டக் குழு­வின் உறுப்­பி­னர்­கள் அசோக்­வர்­தன் ஷெட்டி ஐ.ஏ.எஸ்., பேரா­சி­ரி­யர் நாக­நா­தன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மருத்­து­வர் எழி­லன், பரந்­தா­மன், சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத் துறை­யின் அரசு கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் பிர­தீப் யாதவ் ஐ.ஏ.எஸ்., பொதுத்­துறை அர­சுச் செய­லா­ளர் ரீட்டா ஹெரிஸ் தாக்­கர் ஐ.ஏ.எஸ்., தமிழ்­தா­சன், சூர்யா கிருஷ்­ண­மூர்த்தி, மதுரை பாலா, சஃபி, வழக்­க­றி­ஞர் சர­வ­ணன், எழுத்­தா­ளர் கௌதம்­ராஜ் உள்­பட அறி­ஞர்­கள் கல்­வி­யா­ளர்­கள் எனப்

பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்