சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை
சென்னையை அடுத்த ஆலந்தூர் காவலர் குடி யிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலை யத்தில் ஏட்டாகப் பணி யாற்றினார். இத்தம்பதியின் மூத்த மகள் சத்யா(20), தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (31) என்பவரைக் காதலித்து வந்தார்.
இந்நிலையில், பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீ ரென்று காதலை கை விட்டார். இதனால் ஆத்திர மடைந்த சதீஷ், கடந்த 2022-ம் ஆண்டு அக்.13-ம் தேதி கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அந்த வழியாக வந்த ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்தார்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசா ரணை நடத்தி சதீஷை கைது செய்து, அவர் மீது நீதி மன்றத்தில் குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்தது.
70 பேரிடம் விசாரணை: போலீஸார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகி, ‘சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமையானது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார். அரசு தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அனைத்துத் தரப்பு விசா ரணையும் முடி வடைந்த நிலையில், நீதிமன்றத்தில் சதீஷ் நேற்று ஆஜர்படுத்தப் பட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தர வில், ‘‘தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் சதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. எனவே, அவரை குற்றவாளி என அறிவிக்கிறேன். தண்ட னை விவரம் 30-ம் தேதி தெரிவிக்கப்படும். அன்றைய தினம் சதீஷை மீண்டும் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
கழக அரசு விரைந்து நடவடிக்கை!
இவ்வழக்கில் விரைந்து தீர்ப்பினைப் பெற்றிட, கழக அரசு முனைப்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பதும் – அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகம்மது ஜின்னாவின் வழிகாட்டு தலில், சென்னை மாவட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் மேற்பார்வையில், அரசு சிறப்பு வழக்கறிஞராக ரவீந்திரன் ஜெயபால், இவ்வழக்கில் ஆஜராகி வாதாடினார் என்பதும் குறிப்பிடத்தக்க
தாகும்.
Comments
Post a Comment