இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் குற்றச்சாட்டு!

வக்ஃப் மசோதா அவ­சர கதி­யில் நிறை­வேற்­றப் பட்­டதை கண்­டித்து எதிர்க்­கட்­சி­கள் முழக்­க­மிட்­ட­ தால், நாடா­ளு­மன்ற மக்­க­ளவை தேதி குறிப்­பி­டா­மல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

மக்­க­ளவை நேற்று காலை கூடி­ய­தும் இந்­திய பொருட்­கள் மீது அமெ­ரிக்­கா­வின் வரி உள்­ளிட்ட முக்­கிய பிரச்சினை­கள் குறித்து விவா­திக்­கக்­கோரி காங்­கி­ரஸ், தி.மு.க. உள்­ளிட்ட இந்­தியா கூட்­டணி கட்­சி­களின் எம்.பிக்­கள் வலி

­யு­றுத்­தி­னர். ஆனால், இதற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தால் அவை 12 மணி­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. பின்­னர், மீண்­டும் கூடி­ய­தும் சிறு­பான்­மை­யி­னர் நலத்­துறை அமைச்­சர் கிரண் ரிஜிஜு பேச்­சுக்கு எதிர்க்­கட்­சி­கள் எதிர்ப்பு தெரி­வித்­த­னர். அவ­சர கதி­யில் நீண்ட நேரம் அவையை நடத்தி வக்ஃப் மசோ­தாவை நிறை­

வேற்­றி­ய­தாக எதிர்க்­கட்­சி­கள் குற்­றம் சாட்­டி­னர். இதை­ய­டுத்து, மக்­க­ளவை தேதி குறிப்­பி­டா­மல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. தொகுதி மறு­சீ­ர­மைப்பு, வாக்­கா­ளர் பட்­டி­யல் மோசடி போன்ற முக்­கிய பிரச்சினை­கள் விவா­திக்­கப்­ப­டா­மல் நாடா­ளு­மன்­றம் ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தற்கு எதிர்க்­கட்­சி­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

அமெ­ரிக்கா வரி:

எதிர்க்­கட்­சி­கள் ஆர்ப்­பாட்­டம்!

இதற்­கி­டையே இந்­தி­யப் பொருட்­கள் மீது அமெ­ரிக்கா வரி விதித்த விவ­கா­ரத்­தில் ஒன்­றிய அரசு உரிய விளக்­கம் அளிக்­கக்­கோரி நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் எதிர்க்­கட்­சி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்­தி­யப் பொருட்­கள் மீது 26 சத­வீ­தம் வரி விதிக்­கப்­ப­டும் என அமெ­ரிக்கா அறி­வித்­துள்­ளது. இது குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கம் அளிக்க வேண்­டும் என எதிர்க்­கட்­சி­க­ளின் கோரிக்­கையை ஒன்­றிய அரசு புறந்­தள்­ளி ­யது.

இந்­நி­லை­யில், இந்­தி­யப் பொருட்­கள் மீது அமெ­ரிக்கா வரி விதித்த விவ­காரத்­தில் ஒன்­றிய அரசு உரிய விளக்­கம் அளிக்­கக்­கோரி நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் எதிர்க்­கட்­சி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். காங்­கி­ரஸ், தி.மு.க. உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­

எம்.பிக்­கள் இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்து கொண்­ட­னர்.

அப்­போது, இந்­தி­யப் பொருட்­கள் மீது அமெ­ரிக்கா விதித்­துள்ள வரி­கள் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்தை முற்­றி­லும் சீர­ழிக்­கும் என எதிர்க்­கட்­சி­கள் குற்­றச்­சாட்­டின.

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்