மக்களவையில் – கனி­மொழி கரு­ணா­நிதி வலி­யு­றுத்­தல்

மணிப்­பூர் மாநி­லத்­தில் குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்­சியை அமல்­ப­டுத்­தி­ய­தற்கு ஒப்­பு­தல் அளிக்­கும் தீர்­மா­னம் மீதான விவா­தம் ஏப்­ரல் 2 ஆம் தேதி நள்­ளி­ரவு கடந்து ஏப்­ரல் 3 ஆம் தேதி முன்­னி­ரவு 2 மணிக்கு நடை­பெற்­றது.

இதில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சார்­பில் துணைப் பொதுச் செய­லா­ள­ரும், திமுக நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி ஆற்­றிய உரை வரு­மாறு:–

”மணிப்­பூர் விவ­கா­ரம் பற்றி இந்த அவை­யில் விவா­திக்க வேண்­டும் என்று எதிர்க்­கட்­சி­க­ளான நாங்­கள் பல முறை இங்கே வற்­பு­றுத்­தி­யி­ருக்­கி­றோம்.

ஆனால், இப்­போது, நள்­ளி­ரவு 2 மணிக்கு நீங்­கள் நேரம் தேர்வு செய்­தி­ருக்­கி­றீர்­கள். இது­தான் மணிப்­பூர் மக்­கள் மீது நீங்­கள் காட்­டும் அக்­க­றையா? இது­தான் மணிப்­பூர் மக்­கள் பற்றி விவா­திப்­ப­தற்­கான நேரமா? இதுவே இந்த அரசு மணிப்­பூர் மக்­கள் மீது வைத்­தி­ருக்­கும் மரி­யா­தை­யைக் காட்­டு­கி­றது. முறை­யாக நாளை இதை விவா­திப்ப­ தற்­கான வாய்ப்பை ஏன் நீங்­கள் வழங்­க­வில்லை? இது பெருஞ்­சோ­கம்.

மணிப்­பூ­ரில் நடந்த வன்­மு­றை­க­ளால் 260 க்கும் மேல் மக்­கள் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். 67 ஆயி­ரம் மக்­கள் இடம்­பெ­யர்ந்­தி­ருக்­கி­றார்­கள். 5 ஆயி­ரம் வீடு­கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மேலும் தேவா­ல­யங்­கள், கோவில்­கள் சூறை­யா­டப்­பட்­டி­ரு­கின்­றன,.

நாங்­கள் வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தங்­கி­யி­ருக்­கும் முகாம்­க­ளுக்கு சென்­றோம்., அங்கே மக்­களை சதித்­தோம். அங்கே ஒரு தாயை பார்த்­தேன். ஒவ்­வொரு நாளும் அந்த முகா­மின் வாசல் கத­வ­ருகே நின்று அவள் பார்த்­துக் கொண்டே இருக்­கி­றார். அவ­ரது மகன் திரும்ப வரு­கி­றானா இல்­லையா என்­ப­து­தான் அந்­தத் தாயின் எதிர்­பார்ப்பு. அந்த தாயின் ஒரே ஒரு கோரிக்கை என்ன தெரி­யுமா? ‘என் மகன் இருக்­கி­றானா இல்­லையா என்­பதை மட்­டும் சொல்­லி­வி­டுங்­கள். ஒவ்­வொரு நாளும் அவன் வரு­வான் வரு­வான் என்று நம்­பிக் கொண்டி­ருக்­கி­ றேன். அவன் இல்­லை­யென்று சொல்­லி­விட்­டால் என் எதிர்­பார்ப்­பை­யா­வது நிறுத்­திக் கொள்­வேன்’ என்று கத­றி­னார்.

இது ஏதோ ஒரே ஒரு பெண்­ணின், ஒரே ஒரு தாயின் கதை அல்ல. மணிப்­பூ­ரின் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தாய்­கள் வலி­யும் வேத­னை­யும் மிகுந்த காத்­தி­ருப்­பில் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளின் குடும்­பத்­தில் இருந்­த­வர்­கள் இடம்­பெ­யர்ந்து எங்­கே­னும் சென்­றி­ருக்­கி­றார்­களா... அல்­லது இந்த உல­கத்தை விட்டே சென்­று­விட்­டார்­களா என்ற கேள்­விக்கு விடை தெரி­யா­மல் ஒவ்­வொரு நிமி­ட­மும் துடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

இப்­ப­டிப்­பட்ட துய­ரில் தவிக்­கும் மணிப்­பூ­ருக்கு அங்கே இருந்த அரசு அமை­தியை நிலை­நாட்ட எது­வும் செய்­ய­வில்லை என்­பது கொடுந்­து­யர்.

அங்கே தேர்ந்­தெ­டுக்­க­பப்ட்ட முத­ல­மைச்­சரே வன்­மு­றையை உரு­வாக்­கு­வ­தி­லும், தூண்­டி­வி­டு­வ­தி­லும் ஈடு­பட்­டி­ருக்­கி­றார். ஆயு­தங்­கள் எப்­படி தீவி­ர­வா­தி­கள், போராட்­டக் காரர்­கள் கைக­ளுக்கு சென்­றன? இது வெட்­கக் கேடா­னது. உயி­ரி­ழப்­பு­க­ளுக்கு யார் பதில் சொல்­வது? இரு பெண்­கள் ஆடை­யின்றி பொது­வெ­ளி­யில் இழுத்­துச் செல்­லப்­பட்­ட­னர். இது தேசத்­துக்கே அவ­மா­னம். யார் அதற்கு பதில் சொல்­வது?

இப்­போது குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி அமல்­ப­டுத்­தப்­பட்ட பிறகு அங்கே மக்­கள் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­கி­றார்­கள் என்று உள்­துறை அமைச்­சர் சொல்­கி­றார். ஆனால் அதன் பிற­கும் அங்கே ரத்­தக் களறி தான் ஏற்­பட்­டது. சுதந்­தி­ர­மாக நாட­மா­டு­கி­றார்­கள் என்று அமித் ஷா சொன்ன பிறகு 103 பேர் காய­ம­டைந்­தி­ருக்­கி­றார்­கள். 16 பேர் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்­சி­யால் அங்கே என்ன நடந்­து­வி­டப் போகி­றது?

14 ஆயி­ரம் மாண­வர்­கள் பள்­ளி­க­ளுக்கு மீண்­டும் செல்ல முடி­யா­மல் தவிக்­கி­றார்­கள். ஆனால் கல்­விக்­காக 2.3% தான் பட்­ஜெட்­டில் மணிப்­பூ­ருக்கு அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 28% உணவு பட்­ஜெட்­டி­லும் குறைக்­கப்­பட்டு ள்ளது. அங்கே முகாம்­க­ளில் தண்­ணீர் இல்லை, உணவு இல்லை.

எங்­கள் தமிழ்­நாடு முதல்­வர் தெளி­வாக சொல்­லி­யி­ருக்­கி­றார். மணிப்­பூ­ரில் இயல்பு நிலை உரு­வாக வேண்­டு­மென்­றால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அரசு அமைய வேண்­டும் என்று கூறி­யுள்­ளார். அங்கே அமைதி, இணக்­கம் கொண்­டு­வர வேண்­டும். இந்த அரசு போல இல்­லா­மல் புதிய அரசு மக்­க­ளி­டம் இணக்­கம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அமைய வேண்­டும்.

மணிப்­பூ­ரில் இருக்­கும் பெண்­கள் பற்றி நீங்­கள் கவ­லைப்­ப­டு­கி­றீர்­களா? உங்­க­ளுக்­கும் நாட்­டுக்­கும் நேர்­மை­யாக இருக்க வேண்­டிய நேரம் இது.

இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி உரை­யாற்­றி­னார்.

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்