சட்டமன்றத்தில் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று காலை உரை­யாற்­றிய முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், ‘நீட்’ விலக்கு சட்­டத்­திற்கு ஒன்­றிய அரசு அனுமதி மறுத்­துள்­ளது, கூட்­டாட்­சிக் கருத்­தி­யல் வர­லாற்­றில் ஒரு கருப்பு அத்­தி­யா­யம் – என்று குறிப்­பிட்­டார்.

மேலும் முதல்­வர் அவர்­கள் உரை­யாற்­று­ கை­யில், இது தொடர்­பாக நாம் எடுக்க வேண்­டிய சட்­ட­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் குறித்து கலந்­தா­லோ­சிக்க ஏப்­ரல் 9 (புதன்­கி­ழமை) அன்று மாலை சென்னை – தலைமைச் செய­ல­கத்­தில், சட்­ட­மன்­றக் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கூட்­டம் நடை­பெ­றும் என்று அறி­வித்­தார்.

நீட் தேர்வு முறையை அகற்­று­வ­தற்­கான சட்­ட­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் குறித்து நடை­பெ­ற­வுள்ள அனைத்து சட்­ட­மன்­றக் கட்­சித் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­தா­லோ­ச­னைக் கூட்­டம் தொடர்­பாக, தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு:–

மருத்­து­வத் துறை­யில் நமது நாட்­டிற்கே முன்­னோ­டி­யா­கத் தமிழ்­நாடு திகழ்ந்து வரு­கி­றது. நமது மாநி­லத்­தில் பல்­லாண்­டு­க­ளாக பின்­பற்­றப்­பட்ட சிறப்பான மருத்­து­வக்­கல்வி மாண­வர் சேர்க்கை முறையே இந்­தச் சாத­னை­களுக்கு அடிப்­படை.

சம­வாய்ப்பை உறு­தி­செய்­யும் சேர்க்கை முறை!

2006 ஆம் ஆண்­டில், மருத்­து­வம் உள்­ளிட்ட அனைத்து தொழிற்­பட்­டப் படிப்­பு­ க­ளுக்­கான நுழை­வுத் தேர்வை ரத்து செய்து, பள்­ளி­க­ளில் பன்­னி­ரண்டு ஆண்­டு­கள் பயி­லக்­கூ­டிய பள்­ளிக்­கல்வி மதிப்­பெண்­க­ளின் அடிப்­ப­டை­யில் சமூ­க­நீ­தி­யை­யும், அனைத்­துப் பிரிவு மாண­வர் க­ளுக்­குச் சம­வாய்ப்­பை­யும் உறுதி செய்­யக்­கூ­டிய முன்­னோடி சேர்க்கை முறையை முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் உரு­வாக்­கி­னார்.

சமூ­க­நீ­தியை நிலை­நாட்டி, கிரா­மப்­பு­றங் களில் வாழக்­கூ­டிய ஏழை, எளிய மாண­வர்­க­ளின் மருத்­து­வக் கல்­விக் கனவை நன­வாக்­கக்­கூ­டிய இந்த முறை­யால்­தான் மாநி­லத்­தின் அனைத்­துப் பகு­தி­க­ளில் இருந்­தும் மருத்­து­வர்­கள் உரு­வா­கும் வாய்ப்பு ஏற்­பட்­டது. இதன் பய­னாக, மாநி­லத்­தின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் சிறப்­பான மருத்­து­வச் சேவை­களை வழங்கி வரு­கி­றோம்.

ஏழை, எளிய மாண­வர்­க­ளுக்கு எட்­டாக் கனி­யாக மருத்­து­வப் படிப்பு!

ஆனால், நீட் தேர்வு முறை செயல்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர் இந்­தத் தேர்­விற்­கான பயிற்சி வகுப்­பு­க­ளுக்­குச் சென்று பயிற்சி பெற இய­லாத கிரா­மப்­புற மாண­வர்­க­ளுக்­கும் ஏழை, எளிய குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்­கும் மருத்­து­வப் படிப்பு எட்­டாக்­கனி ஆகி­விட்­டது. மாநி­லத்­தின் கிரா­மப்­பு­றப் பகு­தி­க­ளி­லும் - பின்­தங்­கிய பகு­தி­க­ளி­லும் வழங்­கப்­ப­டும் மருத்­து­வச் சேவை­க­ளை­ யும் எதிர்­கா­லத்­தில் இந்த முறை பாதிக்­கும்.

நீதி­ய­ர­சர் ஏ.கே.ராஜன் தலை­மை­யில் – நாம் அமைத்த உயர்­நி­லைக்­குழு!

நீட் தேர்­வா­னது பயிற்சி வகுப்பு­க­ளுக்­குச் செல்­லும் வசதி படைத்த நகர்ப்­புற மாண­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக அமைந்­துள்­ளது என்­ப­தி­லும், இந்­தத் தேர்­வின் அடிப்­ப­டை­யி­லான மருத்­துவ மாண­வர் சேர்க்கை முறை சமூ­க­நீ­திக்கு எதி­ரா­ன­தாக உள்­ளது என்­ப­தி­லும், தமிழ்­நாட்டு மக்­கள், அர­சி­யல் கட்­சி­கள், சமூ­கச் சிந்­த­னை­யா­ளர்­கள் என அனை­வ­ரி­ட­மும் உள்ள கருத்­தொற்­று­மை­யின் அடிப்­ப­டை­யில், சரி­யான மாற்று மருத்­துவ மாண­வர் சேர்க்கை முறை குறித்து பரிந்­து­ரைப்­ப­தற்­காக ஓய்வு பெற்ற நீதி­ய­ர­சர் ஏ.கே.இரா­ஜன் அவர்­க­ளின் தலை­மை­யில் ஒரு உயர்­நி­லைக் குழு­வினை இந்த அரசு அமைத்­தது.

அந்­தக் குழு­வின் பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யில், இந்­தச் சட்­ட­மன்­றப் பேர­வை­யில் 13.09.2021 அன்று, ‘தமிழ்­நாடு மருத்­து­வப் பட்­டப் படிப்­பு­க­ளுக்­கான சேர்க்­கைச் சட்­டம், 2021’ என்ற சட்­ட­முன்­வ­டிவு ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டும், நீண்ட சட்­டப் போராட்­டத்­திற்­குப் பிற­கும் ஆளு­நரால் ஒப்­பு­தல் வழங்­கப்­ப­டா­மல் மறு­ப­ரி­சீலனை செய்­திட திருப்பி அனுப்­பப்­பட்­டது. இந்­நி­லை­யில் என் தலை­மை­யில் 05.02.2022 அன்று அனைத்­துக் கட்­சிக் கூட்­டம் நடத்­தப்­பட்டு, இந்­தச் சட்­ட­முன்­வ­டி­வினை மீண்­டும் தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில் அறி­மு­கப்­ப­டுத்­து­வது தொடர்­பான தீர்­மா­னம் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்டு, 08.02.2022 அன்று சட்­ட­முன்­வ­டிவு மீண்­டும் தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில் நிறை­வேற்­றப்பட்­டது. பின்­னர், ஆளு­நர் மூலம் குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் ஒப்­பு­த­லுக்­காக ஒன்­றிய அர­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

அனைத்து விளக்­கங்­க­ளும் – உட­னுக்­கு­டன் வழங்­கி­னோம்!

இது குறித்து, ஒன்­றிய அர­சின் சுகா­தா­ரத் துறை, - ஆயுஷ் துறை, - உள்­துறை, உயர்­கல்­வித் துறை என பல்­வேறு அமைச்­ச­கங்­கள் கோரிய அனைத்து விளக்­கங் க­ளுக்­கும் தமிழ்­நாடு அரசு உட­னுக்­கு­டன் உரிய விளக்­கங்­க­ளை­ யும் வழங்­கி­யது. ஆனால் இவற்­றை­யெல்­லாம் ஏற்­கா­மல், நமது மாண­வர்­க­ளுக்­குப் பெரும் பேரி­டி­யாக ஒன்­றிய அரசு. நமது ‘நீட்’ விலக்­குச் சட்­டத்­திற்கு ஒப்­பு­தலை மறுத்­துள்­ளது என்ற வருந்­தத்­தக்க செய்­தியை இந்­தப் பேர­வை­யில் கனத்த இத­யத்­து­டன் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மாநில சட்­ட­மன்­றத்­தின் மாண்­பினை அவ­ம­தித்­துள்ள ஒன்­றிய அர­சின் இத்­த­கைய எதேச்­சா­தி­கா­ரப் போக்கு, அர­ச­மைப்­புச் சட்­டம் தந்­துள்ள கூட்­டாட்­சிக் கருத்­தி­யல் வர­லாற்­றில் ஒரு கருப்பு அத்­தி­யா­யம். தமிழ்­நாட்டு மக்­க­ளின் எண்­ணங்­க­ளை­யும், இந்­தப் பேர­வை­யின் தீர்­மா­னங்­க­ளை­யும் ஒன்­றிய அரசு கருத்­தில்­கொள்­ளவே இல்லை; இதனை மக்­கள் கவ­னித்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்.

நமது போராட்­டம் முடிந்து விட­வில்லை!

பேர­வைத் தலை­வர் அவர்­களே,

ஒன்­றிய அரசு நமது கோரிக்­கையை நிரா­க­ரித்து இருக்­க­லாம்; ஆனால், நீட் தேர்வு முறையை அகற்­று­வ­தற்­கான நமது போராட்­டம் எந்த வகை­யி­லும் முடிந்­து­வி­ட­வில்லை என்­ப­தை­யும், (மேசை­யைத் தட்­டும் ஒலி) இந்­தப் போராட்­டத்­தின் அடுத்­தக் கட்­டத்­தில் நாம் எடுக்க வேண்­டிய சட்­ட­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் குறித்து சட்ட வல்­லு­நர்­க­ளி­ட­மும் கலந்­தா­லோ­சிக்­கப்­ப­டும்.

மேலும், இது­தொ­டர்­பாக அனைத்து சட்­ட­மன்­றக் கட்­சித் தலை­வர்­க­ளி­ட­மும் ஒரு கலந்­தா­லோ­ச­னைக் கூட்­டம் வரும் 9 ஆம் தேதி அன்று மாலை தலை­மைச் செய­ல­கத்­தில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதில் நமது சட்­ட­மன்­றக் கட்­சித் தலை­வர்­கள் அனை­வ­ரும் கலந்­து­கொள்­ளு­மாறு இந்­தத் தரு­ணத்­தில் தங்­கள் (பேர­வைத் தலை­வர்) வாயி­லாக அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கிறேன்.

தமிழ்­நாட்­டில் மருத்­து­வக் கல்வி கன­வோடு பயி­லும் இலட்­சக்­க­ணக்­கான மாண­வர்­கள் மற்­றும் பெற்­றோர்­க­ளின் சார்­பாக, அவர்­க­ளின் கனவை நன­வாக்க தமிழ்­நாடு அரசு உறு­தி­யோடு சட்­ட­ரீதியான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுக்­கும் (மேசை­யைத் தட்­டும் பலத்த ஒலி) என்­பதை இந்­தப் பேர­வை­யில் தங்­கள் வாயி­லா­கத் தெரி­வித்­துக் கொண்டு, அமை­கி­றேன்.

இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்