ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம்: ஏகமனதாக நிறைவேற்றம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (2.4.2025) சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடி யாக மேற்கொள்ள வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அரசினர் தனி தீர்மா னத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில், கச்­சத் தீவு மீட்பு தொடர்­பான அர­சி­னர் தனித் தீர்­மா ­னத்தை முன்­மொ­ழிந்து முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு :–

மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே,

தமிழ்­நாட்­டைச் சேர்ந்த இந்­திய மீன­வர்­கள் இலங்­கைக் கடற்­ப­டை­யி­ன­ரின் தொடர் தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி வரு­வதை கனத்த இத­யத்­தோடு இந்த மாமன்­றத்­தில் நான் பதிவு செய்­யக் கட­மைப்­பட்­டி­ருக்­கிறேன். முற்­றுப்­புள்ளி வைக்க முடி­யாத தொடர் பேர­ழி­வாக இது அமைந்­தி­ருக்­கி­றது. அங்கு எத்­தனை அர­சி­யல் நிலை­மை­கள் மாறி­னா­லும், தமிழ்­நாட்­டைச் சேர்ந்த இந்­திய மீன­வர்­கள் தாக்­கப்­ப­டு­வது மட்­டும் இன்­னும் மாறா­மல் இருக்­கி­றது.

தமிழ்­நாட்டு மீன­வர்­களை

மறந்­து­வி­டும் ஒன்­றிய அரசு!

தமிழ்­நாட்­டைச் சேர்ந்த மீன­வர்­கள் இந்­திய மீன­வர்­கள்­தான் என்­பதை

ஒன்­றிய அரசு அடிக்­கடி மறந்­து­வி­டு­கிற

கார­ணத்­தால், நாம் மீண்­டும் மீண்­டும் அவர்­களை தமிழ்­நாட்­டைச் சேர்ந்த

இந்­திய மீன­வர்­கள் என்று அழுத்­த­மா­கச் சொல்ல வேண்­டி­ய­தாக இருக்­கி­றது. கடல் நீர் ஏன் உப்­பாக இருக்­கி­றது? கடல் கடந்து போன தமி­ழ­னின் கண்­ணீ­ரால் என்று பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் சொன்­னார். கடல் நீர் இன்று ஏன் சிவப்­பாக

இருக்­கி­றது? தமிழ்­நாட்டு மீன­வர் சிந்­திய இரத்­தத்­தால் என்று சொல்ல வேண்­டிய கவ­லை­யான நிலை­மை­யில் தான் நாம் நின்று கொண்­டி­ருக்­கி­றோம்.

ஒன்­றி­யத்­தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்­தால் ஒரு மீன­வர்­கூட கைது செய்­யப்­ப­ட­மாட்­டார் என்று 2014 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக நரேந்­திர மோடி அவர்­கள் சொன்­னார்­கள். ஆனா­லும், இந்­தத் தாக்­கு­தல் தொடர்ந்து கொண்­டு­தான் இருக்­கி­றது. இலங்­கை­யில் சில மாதங்­க­ளுக்கு முன்­னால் ஆட்சி மாற்­றம் நடந்­தி­ருக்­கி­றது. ஏற்­கெ­னவே இருந்­த­வர்­கள் தோல்­வி ­ய­டைந்து, புதி­ய­வர்­கள் ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள். ஆனா­லும், தமிழ்­நாட்டு மீன­வர்­கள் நிலைமை மாற­வில்லை; மீன­வர் ­கள் மீதான தாக்­கு­தல் ஓய­வில்லை. பாரம்­ப­ரிய மீன்­பிடி உரிமை கொண்ட நம்

மீன­வர்­கள் மீன்­பி­டிக்­கச் செல்­லும்­போது தொடர்ந்து சிறை­பி­டிக்­கப்­ப­டு­கி­றார்­கள்;

பட­கு­கள் இலங்கை அர­சாங்­கத்­தால்

பறி­மு­தல் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

மார்ச் 27 அன்று, நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ள­வை­யில் ஒன்­றிய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் ஜெய்­சங்­கர் அவர்­கள், 97 இந்­திய மீன­வர்­கள் இலங்­கைச் சிறை­யில் இருக்­கி­றார்­கள் என்று ஒரு புள்­ளி­

வி­வ­ரத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அதில், 11 பேரை கடந்த 27 ஆம் தேதி இலங்­கைக் கடற்­படை கைது செய்­தி­ருக்­கி­றது. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்­டும் 530 மீன­வர்­கள் இலங்­கைக் கடற்­ப­டை­யால் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். அமைச்­சர் சொன்ன கணக்­குப்­படி பார்த்­தால், ஒரு நாளைக்கு இரண்டு மீன­வர்­களை கைது செய்­துள்­ளார்­கள்.

இரக்­க­மற்ற நிலை­யில்

நடந்­து­கொள்­ளும் இலங்கை அரசு!

எல்­லை­தாண்டி வந்­தார்­கள் என்று சொல்லி அவர்­க­ளுக்கு அதி­க­பட்ச சிறை தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது அல்­லது அதி­க­பட்ச அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­கி­றது. அண்டை நாடாக இருந்து கொண்டு இந்­திய மீன­வர்­கள் மீது எந்­த­வி­த­மான இரக்­க­மும் இல்­லா­மல், நம் மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை நசுக்­கும்­வி­த­மாக, ஏன் அடி­யோடு பறிக்­கும்­வி­த­மாக இலங்­கைக் கடற்­ப­டை­யி­ன­ரும், இலங்கை அர­சும் நடந்து கொள்­வது நமக்­கெல்­லாம் மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது; கண்­டிக்­கத்­தக்­கது. இதனை ஒன்­றிய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்­திட வேண்­டும்.

இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­பது சவா­லாக இருக்­கி­றது என்று ஒன்­றிய அமைச்­சர் ஜெய்­சங்­கர் அவர்­கள் சொல்லி இருக்­கி­றார்­கள். இதில் என்ன சவால் இருக்க முடி­யும் என்று தெரி­ய­வில்லை. வேறொரு மாநில மீன­வர்­கள் இப்­படி தொடர் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­னால், இப்­ப­டித்­தான் வேடிக்கை பார்த்­துக் கொண்டு இருப்­பார்­களா? தமிழ்­நாட்டு மீன­வர்­கள் தாக்­கப்­ப­டு­வது குறித்து தமிழ்­நாடு அர­சின் சார்­பில் நான் தொடர்ந்து கடி­தம் எழு­திக் கொண்டு வரு­கி­றேன். இது­வ­ரைக்­கும் மீன­வர்­கள் கைது, தாக்­கு­தல் குறித்து 74 கடி­தங்­களை ஒன்­றிய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­ச­ருக்­கும், பிர­த­மர் அவர்­­களுக்­கும் எழு­தி­யி­ருக்­கி­றேன். பிர­த­மர் அவர்­களை நேரில் சந்­திக்­கும் போதெல்­லாம் இது­கு­றித்து வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றேன். இரு நாட்டு மீன­வர்­க­ளுக்கு இடை­யே­ யான பேச்­சு­வார்த்­தை­யில் ஆக்­க­பூர்­வ­மான முடி­வு­கள் எட்­டப்­பட இய­லா­மல் கடந்து கொண்­டி­ருக்­கி­றது.

தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின்

வாழ்­வா­தா­ரம் கடும் பாதிப்பு!

கடி­தம் எழு­தி­னால் விடு­விப்­பது, பிறகு கைது செய்­வ­தென்று இலங்கை அர­சின் நட­வ­டிக்கை தொடர்ந்து கொண்டே இருப்­ப­தால், தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மிக­வும் பாதிக்­கப்­ப­டு­கி­றது. மீன்­பி­டித் தொழில் பாதிக்­கப்­பட்டு, பாரம்­ப­ரிய மீன்­பிடி உரிமை கேள்­விக்­கு­றி­யாகி,

கட­லுக்­குச் சென்­றால் பத்­தி­ர­மாக வீடு திரும்­பு­வார்­களா நம் சொந்­தங்­கள் என்று குடும்­பத்­தி­னர் மீளாக் கவ­லை­யில் மூழ்­கி­யி­ருக்க வேண்­டிய துயர நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. எவ்­வ­ளவு காலத்­துக்கு இத­னைச் சகித்­துக் கொண்டு இருக்க முடி­யும்? இது­போன்ற சிக்­க­லுக்கு நிரந்­த­ரத் தீர்வு காண கச்­சத்­தீவு மீட்பே மிகச் சரி­யான வழி என்­பதை இம்­மா­மன்­றத்­தின் வாயி­லாக மீண்­டும் வலி­யு­றுத்­திட விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)

மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே, கச்­சத்­தீவு விவ­கா­ரத்­தைப் பொறுத்­த­வ­ரைக்­கும், கச்­சத்­தீவை மாநில அர­சு­தான் இலங்­கைக்கு அளித்­தது போன்று ஒரு தவ­றான தக­வ­லைப் பரப்பி அர­சி­யல் செய்­வது அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு வழக்­க­மாகி விட்­டது. ஆனால், அர­சி­யல் ஆதா­யத்­திற்­காக கட்­சி­கள் செய்­யும் அதே தவறை ஒன்­றிய அரசு செய்­வது வருந்­தத்­தக்­கது; ஏற்­க­மு­டி­யா­தது. கச்­சத்­தீ­வைப் பொறுத்­த­வ­ரைக்­கும், அந்­தத் தீவைக் கொடுத்து, ஒப்­பந்­தம் போட்ட போதே முத­ல­மைச்­ச­ராக இருந்த கலை­ஞர் அவர்­கள் கடு­மை­யாக எதிர்த்­தார்­கள். தமிழ்­நாட்டு மக்­கள் அதை விரும்ப மாட்­டார்­கள் என்று எடுத்­துச் சொல்­லி­யி­ருக்­கி­றார்.

கச்­சத்­தீவு இலங்­கைக்கு அளிக்­கப்­ப­டக் கூடாது என்று அழுத்­தந்­தி­ருத்­த­மாக வாதிட்டு இருக்­கி­றார். அன்­றைக்­கி­ருந்த தி.மு.க. எம்.பி.-க்கள் இரா செழி­யன், எஸ்.எஸ்.மாரிச்­சாமி ஆகி­யோர் நாடா­ளு­மன்­றத்­திலே கடு­மை­யாக எதிர்த்து இருக்­கி­றார்­கள். அதை­யும் மீறி கச்­சத்­தீவு ஒப்­பந்­தம் 28.6.1974 அன்று கையெ­ழுத்து ஆன­வு­டன், மறு­நாளே அதா­வது, 29.6.1974 அன்றே அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்தை தலை­மைச் செய­ல­கத்­தில் கூட்டி இதைக் கண்­டித்து தீர்­மா­னம் நிறை­வேற்றி, அன்­றை­ய­தி­னமே பிர­த­ம­ருக்­கும் கடி­தம் எழு­தி­னார்.

அந்­தக் கடி­தத்­தில், “I am constrained to express our deep disappointment over the recent Indo-Sri Lanka Agreement” என்று குறிப்­பிட்டு- தமிழ்­நாடு அர­சின், தமிழ்­நாட்டு மக்­க­ளின் எதிர்ப்பை பிர­த­ம­ருக்­குத் தெரி­வித்­துள்­ளதை இங்கே நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன். அப்­போதே 21.8.1974 அன்று “இந்­தி­யா­வுக்கு சொந்­த­மா­ன­தும், தமிழ்­நாட்­டுக்கு நெருங்­கிய உரி­மை­கள் கொண்­ட­து­மான கச்­சத்­தீவு பிரச்­சி­னை­யில் மத்­திய அரசு எடுத்­துள்ள முடிவு பற்றி இந்­தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்­தத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது. மத்­திய அரசு இதனை மறு­ப­ரி­சீ­லனை செய்து கச்­சத்­தீ­வின் மீது இந்­தி­யா­விற்கு அர­சு­ரிமை இருக்­கும் வகை­யில் இலங்கை அர­சு­டன் செய்து கொண்­டுள்ள ஒப்­பந்­தத்­தைத் திருத்­தி­ய­மைக்க முயற்சி எடுத்து, தமிழ்­நாட்டு மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டு­மென்று வலி­யு­றுத்­து­கி­றது” என அர­சி­னர் தனித் தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்து நிறை­வேற்­றி­ய­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த தலை­வர் கலை­ஞர் அவர்­கள்­தான்.

கச்­ச­தீவை மீட்­க­வும், கச்­சத்­தீ­வில் இருக்­கிற இந்­திய மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மையை நிலை­நாட்­ட­வும் தொடர்ந்து பல்­வேறு முயற்­சி­களை திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு எடுத்து வந்­தி­ருக்­கி­றது. கழக அரசு ஆட்­சி­யில் இருக்­கும்­போ­தெல்­லாம் ஒன்­றிய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­ச­ருக்­கும், பிர­த­ம­ருக்­கும் கடி­தங்­கள் எழுதி தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மையை மீட்க வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றது என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.

ஏற்­க­னவே முன்­னாள் முத­ல­மைச்­சர் அம்­மை­யார் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது 3.10.1991 மற்­றும் 3.5.2013 ஆகிய தேதி­க­ளி­லும், அதே­போன்று, இங்கே அமர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய ஓ. பன்­னீர்­செல்­வம் அவர்­கள் முன்­னாள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது 5.12.2014 அன்­றும் கச்­சத்­தீ­வைத் திரும்­பப் பெற இந்த அவை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டு, ஒன்­றிய அரசு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. நான் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற பிறகு, இந்­தி­யப் பிர­த­மர் அவர்­கள் முதன்­மு­த­லில் தமிழ்­நாட்­டிற்கு வந்­த­பொ­ழுது கச்­சத்­தீ­வைத் திரும்­பப் பெற அவ­ரி­டம் வலி­யு­றுத்­திக் குறிப்­பிட்­டுக் காட்­டி­யி­ருக்­கி­றேன்.

பிறகு 19.7.2023 அன்று இந்­தி­யப் பிர­த­ம­ருக்கு எழு­திய கடி­தத்­தில், “வர­லாற்று ரீதி­யாக கச்­சத்­தீவு இந்­தி­யா­வின் ஓர் அங்­க­மாக இருந்­தி­ருக்­கி­றது. தமிழ்­நாடு மீன­வர்­கள் பாரம்­ப­ரி­ய­மாக கச்­சத்­தீ­வைச் சுற்றி மீன்­பி­டித்­துள்­ளார்­கள். மாநில அர­சின் ஒப்­பு­த­லின்றி கச்­சத்­தீவு இலங்­கைக்கு மாற்­றப்­பட்­ட­தால், தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் உரி­மை­க­ளும், வாழ்­வா­தா­ர­மும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.” என்­பதை மேற்­கோள்­காட்டி “கச்­சத்­தீ­வைத் திரும்­பப் பெற வேண்­டும். அதுவே தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளுக்கு நிரந்­த­ரத் தீர்­வாக அமை­யும்” என்று வலி­யு­றுத்தி, “அது­வரை தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மையை மீட்­டுக் கொடுங்­கள்” என்று கேட்­டுக் கொண்­டேன்.

ஒன்­றிய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும் எனது 2.7.2024 தேதி­யிட்ட கடி­தம் மூலம் கச்­சத்­தீவு பிரச்­சி­னை­யை­யும், தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் மீன்­பிடி உரி­மை­யை­யும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றேன். ஆனால், இன்­று­வரை மூன்­றா­வது முறை­யாக ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய பா.ஜ.க. அரசு கச்­சத்­தீவை மீட்­பது குறித்து ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்­பதை நான் வேத­னை­யு­டன் இங்கே குறிப்­பி­டு­கி­றேன்.

ஆகவே, இந்­தச் சூழ­லில், தமிழ்­நாட்டு மீன­வர்­கள் மீன்­பி­டிக்­கச் செல்­லும் போது இலங்­கைக் கடற்­ப­டை­யி­ன­ரால் கடும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­வது, பட­கு­கள் பறி­மு­தல் செய்­யப்­ப­டு­வது, கடும் அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­வது போன்­ற­வற்­றி­லி­ருந்து தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளைப் பாது­காக்­க­வும், விரை­வில் இலங்கை செல்­லும் பிர­த­மர் அவர்­கள் தமிழ்­நாட்டு மீன­வர்­கள் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ரத் தீர்வு காண­வும், கச்­சத்­தீவை மீட்­கும் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைக்கு பேச்­சு­வார்த்தை நடத்­திட வேண்­டும் என்று தமிழ்­நாடு சட்­ட­மன்­றம் விரும்­பு­கி­றது. இதனை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட தீர்­மா­னத்தை இப்­போது நான் முன்­மொ­ழி­கி­றேன்:

தீர்­மா­னம்

“தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­களை நிலை­நாட்­டி­ட­வும், இலங்­கைக் கடற்­ப­டை­யால் தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளுக்கு ஏற்­ப­டும் அனைத்து இன்­னல்­க­ளைப் போக்­கி­ட­வும், கச்­சத்­தீவை மீண்­டும் பெறு­வதே நிரந்­த­ரத் தீர்­வாக அமை­யும்.

இத­னைக் கருத்­தில் கொண்டு, இந்­தி­ய-­­­­இ­லங்கை ஒப்­பந்­தத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்து, கச்­சத்­தீ­வைத் திரும்­பப் பெறு­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் ஒன்­றிய அரசு உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டு­மென்­றும், அர­சு­மு­றைப் பய­ண­மாக இலங்கை செல்­லும் மாண்­பு­மிகு இந்­திய பிர­த­மர் அவர்­கள் அந்­நாட்டு அர­சு­டன் பேசி, இலங்கை சிறை­யில் வாடும் நம் நாட்டு மீன­வர்­க­ளை­யும், அவர்­க­ளது பட­கு­க­ளை­யும் நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்து மீட்­டுக் கொண்டு வர­வேண்­டு­மென்று இப்­பே­ரவை வலி­யு­றுத்­து­கி­றது.”

என்ற தீர்­மா­னத்தை நான் முன்­மொ­ழி­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)

தமிழ்­நாட்­டைச் சார்ந்த இந்­திய மீன­வர்­க­ளின் நலன் கருதி, அனைத்­துக் கட்­சி­க­ளும் இந்­தத் தீர்­மா­னத்தை ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றித் தர வேண்­டு­கி­றேன்.

இவ்­வாறு தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்து முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.

இந்­தத் தீர்­மா­னம் சட்­டப்­பே­ர­வை­யில் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்