நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும், இந்தி ஆதிக்க எதிர்ப்பின் அவசியம் குறித்த ஆறாவது மடல்.

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும், இந்தி ஆதிக்க எதிர்ப்பின் அவசியம் குறித்த ஆறாவது மடல்.

எந்த மொழி மீதும் தமி­ழர்­க­ளுக்கும் தமிழ்­நாட்­டிற்­கும் தனிப்­பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்­த­தில்லை. எந்த மொழி­யா­வது திணிக்­கப்­பட்­டால் தமிழ்­நாடு போராட்­டக் களம் காணா­மல் இருந்­த­தில்லை, தேசிய கல்­விக் கொள்கை வழி­யாக மும்­மொ­ழித் திட்டம் என்ற பெய­ரில் இந்­தி­யைத் திணிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் சதி­யினை உணர்ந்­து­தான் ஒட்­டு­மொத்த தமிழ்­நா­டும் அதனை எதிர்க்­கி­றது. தமி­ழுக்­கும் தமி­ழர்­க­ளுக்­கும் எதி­ரா­கவே என்­றென்­றும் சிந்­திப்­ப­தை ­யும், தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து வஞ்­சிப்­பதை­யுமே தனது கொள்­கை­யா­கக் கொண்­டி­ருக்­கிற பா.ஜ.க. ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜெண்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை

ஆத­ரித்து பேசிக் கொண்­டி­ருப்­பார்­கள். மாண்­பு­மிகு ஆளு­நர் ஆர்.என்.ரவி அது போலப் பேசி­யி­ருப்­பது புதி­ய­து ­மல்ல, பொருட்­ப­டுத்த வேண்­டி­ய­து­மல்ல.

ஆடு நனை­கி­றதே என்று ஓநாய் அழுத கதை­யாக, தமிழ்­நாட்­டின் இரு­மொ­ழிக் கொள்­கை­யால் தென்­னிந்­திய மொழி­க­ளைப் படிக்­கின்ற வாய்ப்பு தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை என புதுச்­ச­ரடு விடு­கி­றார் ஆளு­நர். உத்­த­ரப்­பி­ர­தே­சம், மத்­தி­யப்­பி­ர­தே­சம், பீகார் என பா.ஜ.க.வும், பா.ஜ.க. கூட்­ட­ணி­யும் ஆட்சி செய்­கின்ற வட இந்­திய மாநி­லங்­க­ளில் எத்­தனை வட­இந்­திய மொழி­க­ளைப் பள்­ளி­க­ளில் கற்­றுத் தரு­கி­றார்­கள்? ஆளு­ந­ரி­ட­மும் பதில் இருக்­காது. அவ­ரைப் பேச

வைப்­ப­வர்­க­ளி­ட­மும் பதில் இருக்­காது.

இந்தி ஆதிக்­கத்­தால் தனது சொந்த மாநி­லங்­க­ளி­லேயே 25க்கும் மேற்­பட்ட வட இந்­திய மொழி­கள் பேச்­சு­வழக்­கை­யும், எழுத்து வடி­வத்­தை­யும் இழந்து அழிந்து போன­தை­யும், அழி­வின் விளிம்­பில் இருப்­ப­தை­யும் இந்­தத் தொடர் மட­லின் மூன்­றா­வது கடி­தத்­தில் பட்­டி­ய­லிட்டு எழு­தி­யி­ருந்­த­ து­டன், அத­னைச் சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தி­லும் பதி­விட்­டி­ருந்­தேன்.

உங்­க­ளில் ஒரு­வ­னான நான் சொல்­வது, ஆதா­ரத்­து­டன் கூடிய உண்மை என்­பதை இந்­திய ஒன்­றி­யத்­தின் வட­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த தோழர்­களே

ஆத­ரித்­துப் பதி­விட்­டி­ருக்­கி­றார்­கள்.

Marineravin என்ற தோழர் தன்­னு­டைய X தளப் பதி­வில், “என்­னு­டைய தாய் மொழி மகஹி. நான் ஸ்டாலின் சொல்­வ­து­டன் இங்கே உடன்­ப­டு­கிறேன். எங்­க­ளின் புதிய தலை­மு­றை­யி­னர் மகஹி மொழி­யைப் பேசு­வ­து­மில்லை, அதை அவர்­க­ளால் புரிந்­து­கொள்­ள­வும் முடி­ய­வில்லை. இந்­தித் திணிப்­பைத் தடுக்க வேண்­டும்” என்று குறிப்­பிட்­டி ­ருக்­கி­றார்.

மகஹி என்ற மொழி பீகார் - – மேற்கு வங்­காள மாநி­லங்­க­ளில் பேசப்­ப­டு­கிற மொழி. வட­இந்­திய மாநி­லங்­கள்

பல­வற்­றின் தாய்­மொ­ழி­க­ளும் அவை சார்ந்த பண்­பா­டு­க­ளும் இந்­தி­மொ­ழி­யால் விழுங்­கப்­பட்­டு­விட்­டன என்­ப­தை­ யும், இந்தி மொழிக்கு இடந்­த­ராத தமிழ்­நாடு சிறப்­பாக செயல்­ப­டு­வ­தால் அதை அப்­ப­டியே விட்­டு­வி­டுங்­கள் என்­றும் வைஷ்­னா­ராய் என்­ப­வர்

பதி­விட்­டி­ருக்­கி­றார். சங்­க­மித்ரா

பந்­தோ­பாத்­யாய் என்­ப­வர், ‘அன்­புள்ள தமிழ்­நாடு, இந்­தித் திணிப்­புக்கு எதி­ரா­னப் போரில் முன்­ன­ணி­யில் நிற்­ப­தற்­காக என்­றென்­றும் நினைக்­கப்­ப­டு­வாய்” என்று பதி­விட்­டி­ருக்­கி­றார்.

‘இந்­திக்கு இட­மில்லை’ என்று தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன்

பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளால் கொண்­டு­வ­ரப்­பட்ட இரு­மொ­ழிக் கொள்­கை­யால் தமிழ்­நாடு இன்று பல துறை­ க­ளி­லும் அடைந்­துள்ள வளர்ச்­சி­யை­யும், தமி­ழர்­கள் உல­க­ளா­விய அள­வில் மிகப்­பெ­ரிய நிறு­வ­னங்­க­ளில் உயர்ந்த பொறுப்­பு­க­ளில் இருப்­ப­தை­யும் பிற மாநில மக்­க­ளும் உணர்ந்து, தங்­கள் முன்­னேற்­றத்­திற்­கான வழி­யைக் காணும் விழிப்­பு­ணர்­வைப் பெற்று வரு­கி­றார்­கள். இந்தி படித்­தால் வட­மா­நி­லங்­க­ளில் தமி­ழர்­க­ளுக்கு வேலை கிடைக்­கும் என்ற ஆசை வார்த்­தை ­க­ளால் கட்­டப்­பட்ட பிம்­பத்­திற்கு மாறாக, இந்தி மட்­டுமே அறிந்த- அதை மட்­டுமே படித்த வட­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த சகோ­த­ர-­ச­கோ­த­ரி­கள், வளர்ச்சி பெற்ற மாநி­ல­மான தமிழ்­நாட்­டிற்கு வேலை தேடி வரக்­கூ­டிய வகை­யில் இரு­மொழிக் கொள்கை நம் மாநி­லத்தை உயர்த்­தி­யி­ருக்­கி­றது. மரி­யா­தைக்­குரிய ஆளு­ந­ரும் கூட தமிழ்­நாட்டு மக்க­ளின் வரிப்­ப­ணத்­தில் ஊதி­யம் பெற்று நிர்­வாக வேலை பார்த்­துக் கொண்­டி­ருப்­ப­வர்­தான்.

தென்­னிந்­திய மொழி­க­ளுக்­காக போலிக் கண்­ணீர் வடிக்­கும் ஆளு­நர் தென்­னிந்­திய மொழி­க­ளி­லேயே மூத்த மொழி­யான தமிழ் மொழிக்கு உரிய மரி­யாதை தரா­மல், தமிழ்த்­தாய் வாழ்த்தை அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­வர். ‘தமிழ்­நாடு’ என்ற பெயரை சிதைக்க நினைத்­த­வர். உல­கப் பொது மறை­யான திருக்­கு­ற­ளைப் படைத்­து-­தமிழின் உலக அடை­யா­ள­மா­கத் திக­ழும் அய்­யன் திரு­வள்­ளு­வ­ருக்கு காவி வண்­ணம் பூசி கறைப்­ப­டுத்­தி­ய­வர். தமி­ழர்­கள் அனை­வ­ரின் கண்­ட­னத்­திற்­கும் ஆளா­ன­வர். நம் தாய்­மொழி மீதோ, திரா­விட மொழிக் குடும்­ப­மான தென்­னிந்­தியா மீதோ உண்­மை­யான அக்­கறை செலுத்­தா­மல், இந்தி -– சமஸ்­கி­ரு­தத் திணிப்­புக்­காக மும்­மொழித் திட்­டத்தை வலி­யு­றுத்­து­வ­து­தான் ஆளு­ந­ருக்­கும் அவ­ரைச் சார்ந்­த­வர்­க­ளுக்­கும் வா­டிக்கை.

நவோ­தயா பள்­ளி­கள் என்ற பெய­ரி­லும், அரசு தொலைக்­காட்சி நிறு­வ­ன­மான தூர்­தர்­ஷன் வாயி­லா­க­வும், ஒன்­றிய அர­சின் அலு­வ­ல­கங்­க­ளி­லும் இந்­தி­யைத் திணிக்­கும் முயற்சி 1986ஆம் ஆண்டு முன்­னெ­டுக்­கப் பட்டபோது, அவற்­றுக்கு எதி­ராக நம் உயிர்­நி­கர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆணைக்­கி­ணங்க களம் கண்ட கழ­கப் படை­யில் முன்­வ­ரி­சை­ யில் நின்­றது உங்­க­ளில் ஒரு­வ­னின் தலை­மை­யி­லான இளை­ஞ­ரணி. ரயில் நிலை­யங்­கள், அஞ்­ச­ல­கங்­கள், தொலை­பேசி நிறு­வ­னம், ஒன்­றிய அர­சின் பிற நிறு­வ­னங்­கள் என எங்­கெல்­லாம் இந்தி எழுத்­து­கள் கண்­ணில்­பட்டதோ அங்­கெல்­லாம் அதனை தார்ப்­பூசி அழித்­தது இளை­ஞ­ர­ணி­யின் தமிழ்ப் பட்­டா­ளம். இளை­ஞ­ரணிச் செய­லா­ளர் என்ற முறை­யில் உங்­க­ளில் ஒரு­வ­னான நானும் இந்தி எழுத்­து­களை அழித்து, எதிர்ப்­பு­ணர்­வைக் காட்­டி­னேன்.

ரயில்­நி­லை­யத்­தில் உள்ள இந்தி எழுத்­து­களை அழிக்­கி­றீர்­களே? ரூபாய் நோட்­டில் உள்ள இந்தி எழுத்­து­களை அழிக்க வேண்­டி­ய­து­தானே? என்று அப்­போ­தும் சில அதி­மே­தா­வி­கள்

அதி­கப்­பி­ர­சிங்­கித் தன­மா­கக் கேட்­டார்­கள். நாங்­கள் ஏன் நடு­ராத்­தி­ரி­யில் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்? ரூபாய் நோட்­டில் இந்தி மட்­டுமா உள்­ளது? அந்­தந்த மாநில மொழி­க­ளுக்­கு­ரிய உரி­மையை நிலை­நி­றுத்­தும் முறை­யில், அர­சி­யல் சட்­டத்­தின் எட்­டா­வது அட்­ட­வ­ணை­யில் உள்ள தமிழ் உள்­ளிட்ட மொழி­கள் ரூபாய் நோட்­டில் அச்­சி­டப்­பட்­டுள்­ளன. ரூபாய் நோட்­டில் இருப்­பது மொழி சமத்­து­வம். ரயில்­வே­யி­லும் ஒன்­றிய அர­சின் மற்ற துறை­க­ளி­லும் நடப்­பது மொழித் திணிப்பு. இந்­தி­யைக் கட்­டா­ய­மா­கத் திணிக்­கும் சதித்­திட்­டத்­தினை எதிர்த்து சட்ட நகல் எரிப்புப் போராட்­டத்தை1986ஆம் ஆண்­டில் நம் உயிர்­நி­கர்த் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் அறி­வித்­த­போது, முன்­கள வீர­னாக மொழிப் போர்க்­

க­ளம் கண்­ட­வன்­தான் உங்­க­ளில் ஒரு­வ­னான நான். அப்­போது, கோவை­யில் நடை­பெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்­டில், மொழிப் போர்த் தியா­கி­

க­ளின் படங்­க­ளைத் திறந்து வைத்து உரை­யாற்­று­கின்ற வாய்ப்­பினை இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ரான எனக்கு வழங்­கி­னார், தமி­ழுக்­காக வாழ்ந்­த­வ­ரும்-­ த­மி­ழா­கவே வாழ்ந்­த­வ­ரு­மான நம் தலை­வர் கலை­ஞர்.

“கிரேக்­கத்தை எப்­ப­டி­யா­வது கைப்­பற்றி விட­வேண்­டும் என்று கருதி பார­சீக ஏகா­தி­பத்­தி­யம் ஒரு பெரும் படை­யெ­டுப்பை நடத்­தி­யது. எல்­லை­யிலே ஒரு சிறு கிரேக்­கப் படை­யின் வீரர்­கள் அதனை எதிர்­கொண்டு வீர­ம­ர­ணம் அடை­கி­றார்­கள். அவர்­க­ளின் உடல் வீழ்ந்து கிடந்த இடத்­திலே ஒரு நினை­வுச் சின்­னம் எழுப்­பப்­பட்­டது. அதில்,

‘இவ்­வ­ழிச் செல்­லும் மக்­காள்-­ நீ­வீர்

ஸ்பார்ட்டா சென்று பகர்­வீர்- –

நாங்­கள்

பணியை முடித்­துப் படுத்­தோம்’

-– என்ற வாச­கம் எழு­தப்­பட்­டி­ருந்­தது. நாட்­டைக் காக்­கும் போரில் தங்­கள் உயி­ரைக் கொடுத்த அன்­றைய கிரேக்க வீரர்­க­ளுக்கு கழ­கத் தொண்­டர்­க­ளா­கிய நாம் சளைத்­த­வர்­க­ளல்ல” என்று குறிப்­பிட்­டேன்.

ஹிட்­லர் ஆட்­சி­யில் ஜெர்­மன் மொழி திணிக்­கப்­பட்­டதை எதிர்த்து செக்­கோஸ்­லோ­வியா என்ற நாடு உரு­வா­ன­தை­யும், ஆங்­கில மொழித் திணிப்பை எதிர்த்து அயர்­லாந்து

மக்­கள் நடத்­திய தீர­மிகு போராட்­டத்­தை­யும், பங்­க­ளா­தேஷ் எனும் நாடு உரு­வா­ன­தற்குக் கார­ணம் பாகிஸ்­தான் அர­சின் மொழித் திணிப்பே என்­ப­தை­யும், இலங்­கை­யில் சிங்­கள மொழி ஆதிக்­கம்­தான் அங்­குள்ள

தமி­ழர்­க­ளைத் தனி நாடு கேட்­டுப் போராட வைத்­தி­ருக்­கி­றது என்­ப­தை­யும் அந்த உரை­யிலே எடுத்­து­ரைத்து,

“அர­சி­யல் சட்­டத்­தி­னு­டைய 17ஆம் பாகத்­தில் ஒரு பிரிவை ஒரு தாளில் எழு­திக் கொளுத்­து­கின்ற போராட்­டத்தை நம் தலை­வர் அறி­வித்­தி­ருக்­கி­றார். அப்­ப­டிப்­பட்ட போராட்­டத்­தில் கொளுத்­து­கின்ற அந்­தத் தீ, இன்­றைக்கு இந்­தித் திணிப்பை நடத்­திக் கொண்­டி­ருக்­கிற மோச­டிக்­கா­ரர்­க­ளின் எண்­ணங்­க­ளுக்கு நாம் வைக்­கிற எழுச்சித் தீ” என முழங்­கி­னேன்.

சொன்­ன­தைச் செய்­யும் இயக்­க­மான திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் 1986 இல் இந்­தித் திணிப்­புக்கு எதி­ராக அர­சி­யல் சட்ட நகல் எரிப்புப் போராட்­டத்­தைத் தமிழ்­நாடு முழு­வ­தும் எழுச்­சி­யோடு நடத்­தி­யது. மாநி­ல­மெங்­கும் தீ பர­வி­யது. அந்­தப் போராட்­டத்­தில் பங்­கேற்றுச் சிறை சென்­றேன். ஆயி­ரக் க­ணக்­கான உடன்­பி­றப்­பு­கள் தாய் மொழி காத்­திட சிறை புகுந்­த­னர். இன­மா­னப் பேரா­சி­ரி­யர் பெருந்­தகை உள்­ளிட்ட கழ­கத்­தின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பத்துப் பேரின் பத­வி­யைப் பறித்­தார் அ.தி.மு.க அர­சின் அன்­றைய பேர­வைத் தலை­வர்.

“மாங்­கு­யில் கூவி­டும் பூஞ்­சோ­லை -­எமை மாட்ட நினைக்­கும் சிறைச்­சாலை” என்ற புரட்­சிக் கவி­ஞர் பார­தி­தா­சன் வரி­களை நீதி­மன்­றத்­தில் வாக்­கு­ மூ­ல­மாக அளித்து, சிறை கண்ட நம் உயிர் நிகர்த் தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ருக்கு,கைதி­

க­ளுக்­கான கட்­டம் போட்ட சட்­டை­யை­யும், அரைக்­கால் சட்­டை­யை­யும் அணி­வித்து அவ­ரது கையில் தட்­டும் குவ­ளை­யும் வழங்­கி­னார்­கள் அன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள். தமிழே உயி­ரெ­னக் கொண்ட நம் தலை­வர் சிறைக் கொடு­மை­களைச் சிரித்­த­ ப­டியே எதிர்­கொண்­டார்.

பதவி பறிக்­கப்­பட்­டா­லும், சிறை­யில் அடைத்துச் சித்­தி­ர­வதை செய்­தா­லும், உயி­ரையே கொடுக்க வேண்­டி­யி­ருந்­தா­லும் ஆதிக்க மொழித் திணிப்­புக்கு இடந்­த­ரா­மல் ஆரு­யி­ரா­ன தமி­ழைக் காப்­போம் என்­ப­தில் அப்­போ­தும் இப்­போ­தும் உறு­தி­யாக இருக்­கி­றது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.

இந்­தி­தான் இந்­தி­யா­வின் தேசிய மொழி என்­றும், சமஸ்­கி­ரு­தமே

இந்­தி­யா­வின் முதன்மை மொழி என்­றும் சொல்­லி­ இ­ரண்­டை­யும் திணிக்க நினைக்­கி­றார்­கள். அவர்­கள் சொல்­கின்ற இரண்­டுமே வடி­கட்­டிய பொய் என்­பதை வர­லாறு சொல்­கி­றது.

(தொட­ரும்)

அன்­பு­டன்

மு.க. ஸ்டாலின்

திரு­வள்­ளு­வர் ஆண்டு 2056

மாசி 18

02.03.2025

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்