நம் உயி­ரு­டன் கலந்­தி­ருக்­கும் தலை­வர் கலை­ஞ­ரின் அன்பு உடன்­பி­றப்­பு­க­ளுக்கு உங்­க­ளில் ஒரு­வன் எழு­தும் மொழிப் போர்க்­க­ளம் குறித்த நான்­கா­வது மடல்.


இனத்­தை­யும் மொழி­யை­யும் காக்­கும் போராட்­டக் களம் என்­றால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆளுங்­கட்­சி­யாக இருந்­தா­லும், எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும் எப்­போ­தும் முதன்­மை­யாக நிற்­கும். 1949 செப்­டம்­பர் 17 அன்று தி.மு.க. தொடங்­கப்­பட்டு, மறு­நாள் சென்னை ராய­பு­ரம் ராபின்­சன் பூங்­கா­வில் நடந்த முதல் பொதுக்­கூட்­டத்­தில் கொட்­டும் மழை­யில் கூடி நின்ற தமிழ் மக்­க­ளி­டம் உரை­யாற்­றிய பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், “பெரி­யாரே.. நீங்­கள் அளித்த பயிற்­சிப் பக்­கு­வம் பெற்ற நாங்­கள், உங்­கள் வழி­யி­லேயே சர்க்­காரை எதிர்த்து சிறைச்­சாலை செல்­லத்­தான் வேண்­டு­கோள் விடுக்­கி­றோம். தொடக்க நாளா­கிய இன்றே!” என்று அறி­வித்­தார்.

தி.மு.கழ­கம் பிறந்­தது முதல் இந்த 75 ஆண்­டு­க­ளாக சந்­திக்­காத களம் இல்லை. எதிர்­கொள்­ளாத அடக்­கு­மு­றை­கள் கிடை­யாது. வழக்­கு­கள், சிறை­வா­சம், உயிர்த்­தி­யா­கம் எல்­லா­வற்­றை­யும் தாங்­கித்­தான் தாய்­மொ­ழி­யாம் தமி­ழை­யும் தமி­ழர்­க­ளின் உரி­மை­யை­யும் காக்­கின்ற மகத்­தான இயக்­க­மா­கத் திகழ்­கி­றது. அத­னால்­தான், தி.மு.க ஒரு போராட்­டத்­தைக் கையில் எடுத்­தால் இந்­தி­யாவை ஆட்சி செய்­ப­வர்­கள் அஞ்­சு­கி­றார்­கள்–­அ­ல­று­கி­றார்­கள். நம்மை நோக்கி தேச­வி­ரோ­தி­கள் என்று குற்­றம்­சாட்­டு­ கி­றார்­கள். இந்­திய ஒன்­றி­யத்­தின் பன்­மு­கத் தன்­மை­யை­யும் மொழி வழிப் பண்­பா­டு­க­ளை­யும் சிதைத்து, ஒற்­று­மை­யைக் குலைப்­ப­வர்­கள் தான் உண்­மை­யான தேச­வி­ரோ­தி­கள்.

மூத­றி­ஞர் ராஜாஜி அவர்­கள் 1937 இல் இந்­தி­யைத் திணித்­த­போது திரா­விட இயக்­கம் முன்­னெ­டுத்த போராட்­டம் தமி­ழர்­களை இன உணர்வு கொள்­ளச் செய்­தது. பெல்­லாரி சிறை­யில் பெரி­யார் வாடி­னார். சைதாப்­பேட்டை கிளைச் சிறை­யில் அண்ணா அடைக்­கப்­பட்­டார். 73 பெண்­கள், அவர்­க­ளின் கைக்­கு­ழந்­தை­கள் உள்­பட தமி­ழர்­கள் பலர் சிறை சென்­ற­னர். தமி­ழர்­கள் எழுச்­சி­மிக்க போராட்­டத்­தி­னால், 1939 இல் இந்­தித் திணிப்­பைத் திரும்­பப் பெற்­றார் அன்­றைய பிரிட்­டிஷ் இந்­தி­யா­வின் சென்னை மாகாண

ஆளு­நர்.

முதல் மொழிப் போர்க்­க­ளத்­தில் நாம் வெற்றி பெற்­றா­லும், போர் இன்­னும் தொடர்ந்து கொண்­டு­தான் இருக்­கி­றது. ஏனெ­னில், இது வெறும் மொழித் திணிப்பு மட்­டு­மல்ல. இந்­தித் திணிப்பை முன்னே விட்டு, அதன் தொடர்ச்­சி­யாக இந்த மண்ணை சமஸ்­கி­ரு­த­ம­ய­மாக்­கும் சதித்­திட்­டத்­து­டன், தமிழ்ப் பண்­பாட்­டின் மீது நடத்த நினைக்­கும் படை­யெ­டுப்பு இது. அதைத் தான் தொடக்க காலத்­தி­லி­ருந்தே தெளி­வாக உணர்ந்து போராடி, முறி­ய­டித்து வரு­கி­றது திரா­விட இயக்­கம்.

இந்­தி­யும் தமி­ழைப் போல ஒரு மொழி­தானே, கற்­றுக்­கொள்­ளக்­கூ­டாதா என்று கரி­ச­னத்­து­டன் பே­சு­கி­ற­வர்­க­ளி­டம், “சமஸ்­கி­ரு­தத்­திற்­குப் பதில் தமி­ழி­லேயே கோவில்­க­ளில் அர்ச்­சனை செய்­ய­லாமா? தமி­ழும் செம்­மை­யான மொழி­தானே?” என்று கேட்­டுப் பாருங்­கள். அவர்­க­ளின் உண்­மை­யான நோக்­க­மும் அவர்­க­ளின் அடை­யா­ள­மும் அம்­ப­ல­மா­கி­வி­டும். அத­னால்­தான் இந்­தித் திணிப்பை எதிர்ப்­ப­தில் நாம் உறு­தி­யாக இருக்­கி­றோம்.

மூத­றி­ஞர் ராஜா­ஜிக்­குப் பிறகு, 1948ஆம் ஆண்டு பள்­ளி­க­ளில் மீண்­டும் இந்தி கட்­டா­யப் பாடம் என அறி­விக்­கப்­பட்­ட­போது,தந்தை பெரி­யார் தனது தள­ப­தி­யான பேர­றி­ஞர் அண்­ணாவை போராட்­டக் களத்­தில் சர்­வா­தி­கா­ரி­யாக அறி­வித்து, மொழிப்­போ­ருக்­கா­னத் திரா­வி­டப் படை­யைக் களம் காணச் செய்­தார். அப்­போது முத­ல­மைச்­ச­ராக இருந்த பண்­பா­ளர் ஓமந்­தூர் ராம­சா­மி­யார் அவர்­கள் தந்தை பெரி­யா­ரு­டன் கலந்­து­ரை­யாடி, தமி­ழு­ணர்­வுக்கு மதிப்­ப­ளித்­த­தன் விளை­வாக இந்­தித் திணிப்பு கைவி­டப்­பட்­டது. எனி­னும், இந்­தியா விடு­தலை அடைந்­த­பி­ற­கும், குடி­ய­ரசு நாடாக ஆன பிற­கும்

ஒன்­றிய அர­சின் மூல­மாக இந்­தித் திணிப்பு முயற்­சி­கள் ஏதே­னும் ஒரு வகை­யில் தொடர்ந்து கொண்­டு­தான் இருந்­தன. இந்­திய அர­சி­யல் நிர்­ணய சபை­யில் இந்தி மட்­டும்­தான் இந்­தி­யா­வின் ஆட்­சி­மொழி என்று அதில் இடம்­பெற்­றி­ருந்த வட­இந்­தி­யத் தலை­வர்­கள் சிலர் வலி­யு­றுத்­தி­ய­போது, சென்னை மாகா­ணத்தை சேர்ந்த காங்­கி­ரஸ் கட்சி உறுப்­பி­ன­ரான டி.டி.கே.கிருஷ்­ண­மாச்­சாரி போன்­ற­வர்­கள் அதனை எதிர்த்து தங்­கள் கருத்­து­ க­ளைப் பதிவு செய்­த­னர். அர­சி­யல் சட்­டத்­தையே இந்தி மொழி­யில்­தான் நிறை­வேற்ற வேண்­டும் என்று சிலர் பிடி­வா­தம் பிடித்த போது, பண்­டித ஜவ­கர்­லால் நேரு போன்­ற­வர்­கள் அதனை ஏற்­கா­மல் இந்­தி­யா­வின் அனைத்து மாநி­லங்­க­ளும்

ஏற்­றுக்­கொள்­ளும் வகை­யில் ஆங்­கி­லத்­தில் அதனை நிலை­நி­றுத்­தி­னர். ஆட்சி மொழி­யாக இந்­தி­யும், இணை ஆட்சி மொழி­யாக ஆங்­கி­ல­மும் இருக்­கும் என

அறி­வித்­த­னர்.

நேரு போன்ற தலை­வர்­கள் ‘வேற்­று­மை­யில் ஒற்­றுமை’ காணும் இந்­தி­யாவை உரு­வாக்­கி­னார்­கள். அன்­றைக்கு ஆட்­சி­யில் இருந்த காங்­கி­ரஸ் கட்­சி­யின் தமிழ்­நாட்­டுத் தலை­வர்­க­ளும் இந்தி மட்­டுமே ஆட்­சி­மொழி என்­ப­தற்கு எதி­ராக டெல்­லி­யில் குரல் எழுப்­பி­னர்.இன்­றைக்கு இந்­திய ஒன்­றி­யத்தை ஆட்சி செய்­கின்ற கட்­சி­யின் தலை­வர்­கள் இந்­தி­யைத் திணிப்­ப­தும், அதை ஏற்க மறுத்­தால் தமிழ்­நாட்­டிற்கு நிதி ஒதுக்­கா­மல் வஞ்­சிப்­ப­து­மாக இருக்­கி­றார்­கள். இதைத் தட்­டிக் கேட்க வேண்­டிய தமிழ்­நாட்டு பா.ஜ.க தலை­வர்­களோ, இந்தி தெரி­யாத தமி­ழர்­களை நோக்­கி­வ­ட­மா­நி­லத்­த­வர்­கள் திட்­டி­னால் புரிந்­து­கொள்­ள­மு­டி­யாது என்­றும், வட­மா­நி­லங்­க­ளுக்கு சென்­றால் உண­வ­கங்­க­ளில் ஆர்­டர் பண்ண முடி­யாது என்­றும், கழி­வறை செல்­வ­தற்­குக்­கூட இந்தி தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் எல்­லோ­ரும் எள்ளி நகை­யா­டும் வகை­யி­லான அற்­பக் கார­ணங்­க­ளைச் சொல்­கி­றார்­கள்.

ரயில் பய­ணத்­தில் இந்தி பேசும் மாநி­லத்­த­வர்­கள் தமி­ழர்­களை இந்­தி­யில் திட்­டி­னால், பதி­லுக்கு நம்­ம­வர்­கள் அவர்­க­ளைத் தமி­ழில் திட்ட முடி­யாதா? சுய­ம­ரி­யாதை உணர்­வும் சூடும் சுர­ணை­யும் உள்ள தமி­ழர்­கள் அப்­ப­டித்­தான் செய்­வார்­கள். இங்­குள்ள பா.ஜ.க. வினர் எப்­ப­டிப்­பட்­ட­வர்­களோ!

ஆதிக்க உணர்­வு­டன் திணிக்­கப்­ப­டும் மொழி­களை சுய­ம­ரி­யாதை உணர்­வு­டன் எதிர்த்து நிற்­கும் வலிமை தமி­ழுக்­கும் தமி­ழர்­க­ளுக்­கும் உண்டு. ரயில் நிலை­யங்­க­ளில், அஞ்­ச­ல­கங்­க­ளில் உள்ள பெயர்ப் பல­கை­கள் தொடங்கி, ஒன்­றிய அரசு அலு­வ­ல­கங்­க­ளில் இந்­தியே முதன்­மை­யாக இருப்­பதை எதிர்த்து, அந்த இந்தி எழுத்­து­களை அழிக்­கும் போராட்­டத்­தைத் திரா­விட இயக்­கங்­கள் தொடங்­கின.

திரா­வி­டர் கழ­கத்­தி­லி­ருந்து திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­கிற அர­சி­யல் இயக்­கம் உரு­வா­கி­விட்­டா­லும், இந்தி ஆதிக்­கத்தை எதிர்த்து, தமி­ழைக் காப்­ப­தில் இரட்­டைக் குழல் துப்­பாக்­கி­க­ளாக இரண்டு இயக்­கங்­க­ளும் செயல்­பட்­டன. 1952 ஆகஸ்ட் முதல் தேதி அன்று திருச்சி ரயில்வே சந்­திப்­பின் ஒரு பகு­தி­யில் இருந்த பெயர்ப்­ப­ல­கை­யில் இந்தி எழுத்­து­க­ளைத் தந்தை பெரி­யார் அழிக்க, மற்­றொரு பகு­தி­யில் இருந்த பெயர்ப் பல­கை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரும் அவ­ரு­டன் ஊர்­வ­ல­மாக வந்த தி.மு.கழ­கத்­தி­ன­ரும் இந்தி எழுத்­து­களை அழித்­த­னர். இத்­த­கை­யத் தொடர் போராட்­டங்­க­ளுக்­குப் பிறகே, ரயில் நிலைய பெயர்ப் பல­கை­க­ளில் முத­லி­டத்­தில் இருந்த இந்தி எழுத்­து­க­ளுக்­குப் பதி­லாக, தமிழ் முத­லி­டம் பிடித்­தது.

அந்­தந்த மாநில ரயில் நிலை­யங்­க­ளி­ லும் அவ­ர­வர் தாய்­மொழி முதன்­மை­யா­க­வும், இந்தி எழுத்­து­கள் அடுத்­த­தா­க­வும், ஆங்­கி­லம் மூன்­றா­வ­தா­க­வும் இருக்­கி­ற­தென்­றால் அதற்கு திரா­விட இயக்­கம் முன்­னெ­டுத்த மொழிப் போராட்­டமே கார­ண­மா­கும். தமிழை மட்­டு­மல்ல, இந்தி ஆதிக்­கத்­தி­ட­மி­ருந்து மற்ற மாநி­லத்­த­வர்­க­ளின் தாய்­மொ­ழி­யை­யும் காப்­ப­தற்கு திரா­விட இயக்­கத்­தின் உறு­தி­யான இந்தி ஆதிக்க எதிர்ப்­பு­ணர்வே முதன்­மை­யாக உள்­ளது. இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் நடை­மு­றைக்கு வந்­த­பின், 15 ஆண்­டு­க­ளில் இந்­தியை மட்­டுமே ஆட்­சி­மொ­ழி­யாக நிறு­வுவ­தற்­கான சட்­டப்­பி­ரி­வு­களை முன்­வைத்து, அதற்­கான நட­வ­டிக்­கை­களை அன்­றைய ஒன்­றிய அரசு முயன்­ற­போது, 1957ஆம் ஆண்­டில் முதன்

மு­த­லா­கத் தேர்­தல் களம் கண்டு, இரண்டு உறுப்­பி­னர்­க­ளு­டன் நாடா­ளு­மன்­றத்­தில் நுழைந்­தது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். நம் இயக்­கத்­தின் மக்­க­ளவை உறுப்­பி­னர்­க­ளான திரு­வண்­ணா­ மலை தரு­ம­லிங்­க­மும், சொல்­லின் செல்­வர் ஈ.வெ.கி.சம்­பத்­தும், பிர­த­மர் நேரு இருந்த அவை­யில் இந்தி ஆதிக்­கத்தை எதிர்த்து முழங்­கி­னர். இந்­தியா என்­பது ஒற்றை நாடல்ல, இது ஒரு துணைக் கண்­டம். பல மொழி­க­ளைப் பேசும் தேசிய இனங்­க­ளைக் கொண்ட நிலப்­ப­ரப்பு என்­பதை ஒட்­டு­மொத்த மக்­க­ளும் உணர்ந்­து­கொள்­ளும் வகை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் முதன்­மு­த­லில் உரக்க முழங்­கிய இயக்­கம் நம் தி.மு.கழ­கம். அதன் விளை­வா­கத்­தான், “இந்தி பேசாத மாநில மக்­கள் விரும்­பு­கிற வரை ஆட்­சி­மொ­ழி­யாக ஆங்­கி­லம் நீடிக்­கும்” என்ற உறு­தி­மொ­ழியை பிர­த­மர் நேரு வழங்­கி­னார். தென்­னிந்­திய மாநி­லங்­கள் மட்­டு­மின்றி, அசாம், மேற்­கு­வங்­கம் போன்ற மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளும் ஆட்­சி­மொழி என்ற பெய­ரில் இந்தி ஆதிக்­கத்தை எதிர்த்­துக் குரல் எழுப்­பி­னர். பிர­த­மர் நேரு தனது உறு­தி­ மொழி மீறப்­ப­டாது எனக்

கடி­தம் வாயி­லாக உறுதி செய்­தார்.

தி.மு.க.வின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஈ.வெ.கி.சம்­பத் அவர்­க­ளுக்கு 1960ஆம் ஆண்டு பிர­த­மர் நேரு உத்­த­ர­வா­தம் அளித்து எழு­திய கடி­தத்தை, சென்னை கடற்­க­ரை­யில் நடந்த கழ­கப் பொதுக்­கூட்­டத்­தில் இலட்­சக்­க­ணக்­கில் திரண்­டி­ருந்த மக்­க­ளின் முன் வெளி­யிட்ட பேர­றி­ஞர் அண்ணா, “என் தம்­பிக்கு வாக்­கு­று­தியை வரைந்­துள்ள இந்­தக் கரம், (அமெ­ரிக்க ஜனா­தி­பதி) ஐச­னோ­வ­ரோடு கைக்­கு­லுக்­கிய கரம், ட்ரூம­னோடு கைகு­லுக்கிய கரம், (எகிப்து) நாச­ரோடு கைகு­லுக்­கிய கரம். இந்­தக் கரம்­தான் என் தம்­பிக்கு கையெ­ழுத்­திட்டு வாக்­கு­று­தியை வழங்­கி­ யுள்­ளது” என நேரு­வின் வாக்­கு­று­தி­யைக் குறிப்­பிட்­டார்.

கடற்­க­ரை­யில் முழங்­கிய அண்ணா 1962ஆம் ஆண்டு இந்­தி­ய­நா­டா­ளு­மன்ற மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராகி ஆற்­றிய முதல் உரையே ஒட்­டு­மொத்த அவை­யை­யும் கட்­டிப் போட்­டது. ‘I belong to the Dravidian Stock’ என்ற அவ­ரது புகழ்­பெற்ற உரை, மாநில மொழி­கள் மீதான பிர­த­மர் நேரு உள்­ளிட்ட ஆட்­சி­யா­ளர்­க­ளின் பார்­வை­யில் புதிய திருப்­பத்தை உரு­வாக்­கி­யது. 1963ஆம் ஆண்டு மே மாதம், ‘இந்தி அச்­சு­றுத்­தலை எதிர்ப்­போம்’ என்று மாநி­லங்­க­ள­வை­யில் அண்ணா ஆற்­றிய உரை இந்­தியை ஆட்­சி­மொ­ழி­யாக்­கு­வ­தால் இந்­தி­யா­வின் பிற மொழி­கள் எப்­ப­டி­ யெல்­லாம் பாதிக்­கப்­ப­டும் என்­பதை தன் அழுத்­த­மான வாதங்­க­ளால் முன்­வைத்­தார்.

அந்­நிய மொழி­யான ஆங்­கி­லத்தை ஏற்­றுக்­கொள்­ளும்­போது, இந்­திய மொழி­யான இந்­தியை ஏன் எதிர்க்­கி­றீர்­கள் என்று ‘அறி­வு ததும்பி வழி­யும்‘ இன்­றைய ஒன்­றிய ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் கட்­சி­யி­ன­ரும் கேட்­கி­றார்­கள். ஆங்­கி­லம் எல்லா மாநி­லங்­க­ளுக்­கும் அந்­நிய மொழி. ஆனால், இந்தி சில மாநி­லங்­க­ளுக்கு மட்­டும் தாய்­மொழி. தமிழ்­நாடு உள்­ளிட்ட மற்ற மாநி­லங்­கள் அனைத்­திற்­குமே அது அந்­நிய மொழி.

இதனை நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ள­வை­யில் மிகத் தெளி­வாக விளக்­கிய பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், “இந்தி பேசும் மாநி­லங்­க­ளின் மக்­க­ளுக்கு அதுவே தாய்­மொ­ழி­யாக இருக்­கும். அதுவே அரசு மொழி­யா­க­வும் இருக்­கும். அதுவே பயிற்று மொழி­யா­க­வும் இருக்­கும். அதுவே மத்­திய அர­சின் மொழி­யா­க­வும் இருக்­கும். இந்தி பேசும் மக்­க­ளுக்கு இவ்­வ­ளவு வாய்ப்­பு­கள், உரி­மை­களை வழங்­கி­விட்டு, இந்தி பேசாத (மற்­ற­மொ­ழி­க­ளைத் தாய்­மொ­ழி­யா­கக் கொண்ட) எம் போன்ற மக்­க­ளுக்கு எவ்­வ­ளவு பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கி­றீர்­கள்?” என்று கேட்­டார்.

அன்று அண்ணா கேட்­ட­தைத்­தான் நாமும் கேட்­கி­றோம். அண்ணா உரு­வாக்­கிய இரு­மொ­ழிக் கொள்­கையே தமிழ்­நாட்­டில் நீடிக்க வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றோம். ‘காலம் மாறி­விட்­டது அத­னால் இந்­தி­யைத் திணிப்­போம்’ என்­கி­றார்­கள் இன எதி­ரி­கள். எத்­தனை காலங்­கள் மாறி­னா­லும் அதற்கு ஈடு­கொ­டுத்து

நிற்­கும் செம்­மொ­ழி­யாம் தமிழ் மீது

இந்­தி–­ச­மஸ்­கி­ருத ஆதிக்­கத்­திற்கு இடம் கொடுக்க மாட்­டோம். உயி­ரைக் கொடுத்­தே­னும் தமி­ழைக் காப்­போம்!

(தொட­ரும்)

அன்­பு­டன்

மு.க. ஸ்டாலின்

திரு­வள்­ளு­வர் ஆண்டு 2056

மாசி 15

27.-02.-2025.

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்