நான் முதலமைச்சராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்கவே மாட்டேன்!

நான் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் வரை டங்ஸ்­டன் திட்­டத்தை தமிழ்­நாட்­டிற்­குள் நுழைய விட­மாட்­டேன்’’ என்று முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சட்­டப்­பே­ர­வை­யில் பிர­க­ட­னம் செய்­தார்.

சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று மதுரை மாவட்­டம் அரிட்­டப்­பாட்­டி­யில் டங்ஸ்­டன் சுரங்­கத்­துக்கு வழங்­கப்­பட்ட உரி­மத்தை ரத்து செய்ய வலி­யு­றுத்தி தனித் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டது. இந்த தனித் தீர்­மா­னம் மீது பல்­வேறு கட்சி உறுப்­பி­னர்­க­ளும் உரை­யாற்­றி­னர்.

அந்த வகை­யில் தனித் தீர்­மா­னம் மீது எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி உரை­யாற்­றி­னார். அப்­போது, ‘‘தமி­ழக அரசு

10 மாதங்­க­ளாக என்ன செய்­து­கொண்­டி­ருந்­தது’’ என்று எடப்­பாடி பழ­னி­சாமி தொடர்ந்து அதே

கேள்­வியை எழுப்­பிய வண்ண­ மிருந்­தார்.

அப்­போது நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன்,. தொடக்­கம் முதலே டங்ஸ்­டன் சுரங்­கத்­துக்கு எதிர்த்து வரு­கி­றோம். சுரங்­கத்­துக்கு ஒப்­பந்­தம் விடு­வ­தற்­கான சட்­டத்­தில் ஒன்­றிய அரசு தானே ஒரு திருத்­தத்தை செய்­து­விட்­டது. யாரை­யும் கேட்­க­வில்லை. சட்­டத்­தைத் திருத்­தி­விட்டு ஒன்­றிய அரசு என்ன சொல்­கி­றது என்­றால், சுரங்­கத்­துக்­கான ஏலம் விடும் அதி­கா­ரம் ஒன்­றிய அர­சுக்கே உள்­ளது.

மேலும், ஒன்­றிய அரசு தேர்வு செய்­யும் ஏல­தா­ர­ருக்கு சுரங்­கத்தை குத்­தகை விடும் அதி­கா­ரம் மட்­டுமே மாநி­லத்­துக்கு உள்­ளது என்று கூறி­யி­ருக்­கி­றது. டங்ஸ்­டன் சுரங்­கத்­தால் ஏற்­ப­டும் பாதிப்­பு­களை புள்ளி விவ­ரங்­க­ளு­டன் ஒன்­றிய அர­சுக்கு தெரி­வித்­து­விட்­டோம். தமிழ்­நாடு அரசு எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை என்­பது முற்­றி­லும் தவ­றா­னது என்று கூறி­னார்.

அப்­போ­தும் எடப்­பாடி பழனி சாமி தான் கூறி­ய­தையே மீண்­டும் கூறி­னார்.

இந்­நி­லை­யில் சட்­டப்­பே­ர­வை­யில் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்கு அளித்த பதி­லடி வரு­மாறு:-

இங்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் உங்­கள் உறுப்­பி­னர்­கள் இத்­தனை பேர் இருக்­கி­றார்­கள் என்று பெருமை பேசு­கி­றீர்­களே, என்ன செய்­தீர்­கள் என்ற ஒரு கேள்­வி­யைக் கேட்­டார்­கள். எங்­க­ளு­டைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றத்­திலே கடு­மை­யாக எதிர்த்­தி­ருக்­கி­றார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) நான்­கூட, எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் ஆதா­ரம் இல்­லா­மல் பேச­மாட்­டார் என்று பொறு­மை­யாக இருந்­தேன். ஆனால், இப்­போது நான் விவ­ரத்­தைக் கேட்டு ஆதா­ரத்­தோடு சொல்­கி­றேன். நாடா­ளு­மன்­றத்­திலே எங்­க­ளு­டைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கடு­மை­யாக இதை எதிர்த்­தி­ருக்­கி­றார்­கள். அது­மட்­டு­மல்ல; அங்கே மக்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்ட நேரத்­தில், அந்த மாவட்­டத்­தில் அமைச்­ச­ராக இருக்­கக்­கூ­டிய மூர்த்தி அவர்­கள் நேர­டி­யா­கச் சென்று, அந்­தப் போராட்­டத்­தின் தன்­மை­யைப் பற்றி அறிந்­து­கொண்டு, “போராட்­டத்தை நிறுத்­துங்­கள்; எங்­கள் அரசு உங்­க­ளுக்கு ஆத­ர­வாக இருக்­கும்” என்று சொன்­னார். அதோடு, இது தொடர்­பாக முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் இந்­தி­யப் பிர­த­மர் அவர்­க­ளுக்­குக் கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றார் என்று சொல்லி, சட்­ட­மன்­றத்­தில் இது குறித்து தீர்­மா­னம் கொண்டு வரப்­போ­கி­றோம் (மேசை­யைத் தட்­டும் ஒலி) என்­ப­தை­யும் அந்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­க­ளி­டத்­தில் சொல்லி, அதற்­குப் பிற­கு­தான் இந்­தத் தீர்­மா­னம் இங்கு வந்­தி­ருக்­கி­றது என்­பதை எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டு­மென்று இங்கே தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

இவ்­வ­ளவு வேக­மா­கப் பேசி­வி­டு­கின்ற கார­ணத்­தால் ஏதோ சாதித்­து­விட்­டோம் என்று நீங்­கள் நினைத்­து­விட வேண்­டாம். நிச்­ச­ய­மா­கச் சொல்­கி­றேன்; உறு­தி­யா­கச் சொல்­கி­றேன். நாங்­கள் அவ்­வப்­போது தொடர்ந்து கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றோம்; எங்­க­ளு­டைய கண்­ட­னக் குரலை நாடா­ளு­மன்­றத்­தில் பதிவு செய்து கொண்­டி­ருக்­கி­றோம். அது­மட்­டு­மல்ல; போராட்­டக்­க­ளத்­தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­க­ளி­டத்­தில்­கூட நம்­மு­டைய அமைச்­சர் அவர்­கள் பேசு­கின்­ற­போது, சட்­ட­மன்­றம் கூடு­கின்­ற ­போது இது­போன்ற ஒரு தீர்­மா­னத்தை அவை­யில் கொண்டு வரு­வோம் என்­றும் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம். அதோடு, ஒன்­றிய அர­சுக்­குக் கடி­தம் எழு­து­கின்­ற­போது, அது­தொ­டர்­பா ன செய்தி வெளி­யீ­டு­க­ளில் இந்­தி­யப் பிர­த­மர் அவர்­க­ளுக்கு, முத­ல­மைச்­சர் அவர்­கள் இது­சம்­பந்­த­மாக கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றார் என்­கிற செய்­தி­யெல்­லாம் விவ­ர­மாக வந்­தி­ருக்­கி­றது. ஆனால், நீங்­கள் இது­கு­றித்து தெரி­ய­வில்லை, தெரி­ய­வில்லை என்று பேசி­னால், என்ன அர்த்­தம்?

நாடா­ளு­மன்­றம் கூடி, கூடி கலைந்­து­கொண்­டி­ருக்­கி­றதே தவிர, அங்கே தொடர்ந்து அவை நட­வ­டிக்­கை­கள் நடந்­த­தாக நமக்கு இது­வ­ரை­யில் செய்தி வர­வில்லை. ஆனால், கிடைத்த நேரத்­தைப் பயன்­ப­டுத்தி, அதற்கு நாங்­கள் எதிர்ப்பு தெரி­வித்து இருக்­கி­றோம். நாடா­ளு­மன்­றம் கூடு­கி­றது; ஆனால், அவையை ஒத்­தி­வைக்­கிற சூழ்­நி­லை­தான் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றதே தவிர, தொடர்ந்து அவை நடக்­க­வில்லை. இதை எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் பத்­தி­ரி­கை­யில் படித்­தி­ருப்­பார் என்று நினைக்­கி­றேன்.

அப்­போது எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருக்­கி­றோம்; எதிர்ப்­புத் தெரி­விக்­க­வில்லை என்று தவ­றான தக­வலை நீங்­கள் இங்கே பதிவு செய்­கி­றீர்­கள். அதை­யும் நான் தெளி­வு­ப­டுத்­தி­விட்­டேன். எதிர்ப்பு தெரி­வித்து இருக்­கி­றோம்; தி.மு.க. சார்­பில் அங்கே எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருக்­கி­றோம்.

சட்­டம் நிறை­வே­றி­யது என்­றால், அது எங்­க­ளு­டைய ஆத­ர­வில் நிறை­வே­ற­வில்லை. நாங்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருக்­கி­றோம். அது நாடா­ளு­மன்­றத்­தில் பதி­வா­கி­யி­ருக்­கி­றது. எப்­படி நாங்­கள் அதைத் தடுக்க முடி­யும்? Majority அவர்­கள் இருக்­கும்­போது, அதை எப்­ப­டிச் செய்­ய­மு­டி­யும் என்று சொல்­லுங்­கள். நீங்­க­ளும் சில பிரச்­சி­னை­க­ளில் அங்கே குரல் கொடுத்­தோம்; குரல் கொடுத்­தோம் என்று பல­முறை சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். அப்­போ­தெல்­லாம் நிறை­வேற்­றிய தீர்­மா­னத்தை உங்­க­ளால் தடுத்­து­விட முடிந்­ததா? சொல்­லுங்­கள்.

ஒன்­றிய அரசு இந்த விஷ­யத்­தில் ஏலம் விட்­டு­விட்­ட­தா­கச் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்த அர­சைப் பொறுத்­த­வ­ரை­யில், நிச்­ச­ய­மா­கச் சொல்­கி­றேன். ஒன்­றிய அரசு ஏலம் விட்­டா­லும், நிச்­ச­ய­மாக, உறு­தி­யாக இந்த அரசு அதற்­கு­ரிய அனு­ம­தியை தரு­வ­தற்­கான வாய்ப்பே கிடை­யாது. அதிலே திட்­ட­வட்­ட­மாக இருக்­கி­றோம். இது­தான் முடிவு.

மறு­ப­டி­யும் ஆரம்ப காலக்­கட்­டத்­தி­லி­ருந்து என்று, ஆரம்­பத்­திற்­குப் போய்­விட்­டார். திரும்­பத் திரும்ப ஒன்­றைத் தெளி­வா­கச் சொல்­கி­றேன். நான் முத­ல­மைச்­ச­ராக இருக்­கிற வரை­யில் நிச்­ச­ய­மாக ஒன்­றிய அரசு இந்­தத் திட்­டத்­தைக் கொண்­டு­வர முடி­யாது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) வந்­தால் அதைத் தடுத்தே தீரு­வோம். திரும்ப, திரும்­பச் சொல்­கி­றேன். நான் தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­ச­ராக இருக்­கின்ற வரை­யிலே, நிச்­ச­ய­மாக நாங்­கள் அனு­ம­திக்க மாட்­டோம்; அனு­ம­திக்க மாட்­டோம்; அனு­ம­திக்க மாட்­டோம்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள், ஏன் இவ்­வ­ளவு கால­தா­ம­தம்?” என்று மீண்­டும் மீண்­டும் கேட்­கி­றார். அவர்­கள் பார்­வை­யில் அப்­ப­டி­யி­ருக்­க­லாம்; அல்­லது நாம் தவ­றி­விட்­டோம் என்­று­கூட இருக்­க­லாம். ஆனால், எங்­க­ளு­டைய பார்­வை­யில் அவ்­வப்­போது நாங்­கள் இந்­தப் பிரச்­சி­னையை ஒன்­றிய அர­சுக்­குச் சுட்­டிக்­காட்­டி­ யி­ருக்­கி­றோம்; கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றோம்.

அத­னால்­தான் திரும்ப, திரும்­பச் சொல்­கி­றேன். எந்­தக் கார­ணத்­தைக் கொண்­டும் தமிழ்­நாட்­டிற்­குள் ஒன்­றிய அர­சால் போடப்­ப­டக்­கூ­டிய இந்­தத் திட்­டம், நிச்­ச­யம் வரக்­கூ­டிய வாய்ப்பு இருக்­காது, அதைத் தடுத்து நிறுத்­து­வோம். அப்­படி ஒரு சூழல் வந்­தால் இந்­தப் பொறுப்­பில் நான் இருக்க மாட்­டேன்; முத­ல­மைச்­சர் பொறுப்­பில் இருக்க மாட்­டேன் என்று தெளி­வா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) எனவே, தய­வு­கூர்ந்து மீண்­டும், மீண்­டும் நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரை­யும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளை­யும் நான் கேட்­டுக்­கொள்­கி­றேன். ஏற்­கெ­னவே எல்­லாக் கட்­சித் தலை­வர்­க­ளும் இந்­தத் தீர்­மா­னத்தை ஆத­ரித்­துப் பேசி­யி­ருக்­கி­றார்­கள். எனவே, நீங்­க­ளும் அதை ஆத­ரித்து ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றித் தர வேண்­டு­மென்று பேர­வைத் தலை­வர் அவர்­கள் மூல­மாக உங்­களை நான் பணி­வோடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய துரை­மு­ரு­கன்; திட்­டத்தை தமிழ்­நாடு அரசு அனு­ம­திக்­காது என்று சட்­டப்­பே­ர­வை­யி­லேயே முதல்­வர் பிர­க­ட­னப்­ப­டுத்தி­ யிருக்­கி­றார். முதல்­வர் ஸ்டாலின் தெளி­வாக சொல்­லி­விட்­டார், இனி­யும் தொடர்ந்து பேசு­கி­றீர்­கள் என்­றால், நீங்­கள் வேதாந்தா நிறு­வ­னத்­து­ட­னேயே பேசி விட­லாம் என்று கூறி­னார். அதனை தொடர்ந்து டங்ஸ்­டன் சுரங்­கம் அமைப்­ப­தற்கு எதி­ரான தமி­ழக அர­சின் தனித் தீர்­மா­னத்­திற்கு அனைத்து கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­க­ளும் ஆத­ரவு தெரி­வித்­த­னர். அதனை தொடர்ந்து அரிட்­டாப்­பட்டி டங்க்ஸ்­டன் சுரங்­கம் அமைக்­கும் முயற்­சிக்கு எதி­ரான தனித்­தீர்­மா­னம் அ.தி­.மு.க. உள்­ளிட்ட கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் சட்­டப்­பே­ர­வை­யில் ஒரு­ம­ன­தாக நிறை­வே­றி­யது.

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்