கழக அரசின் பங்களிப்பைத் தவிர்த்துவிட்டு, சென்னை மாநகரின் வளர்ச்சி வரலாற்றை எழுதிட முடியாது!


சென்னை, ரிப்­பன் கட்­டட வளா­கத்­தில் நடை­பெற்ற, பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் வளர்ச்­.309 கோடி மதிப்­பீட்­டில் நடை­பெ­ற­வுள்ள 493 புதிய திட்­டப் பணி

­க­ளுக்கு அடிக்­கல் நாட்டி, 17 முடி­வுற்ற திட்­டப் பணி­களை, மக்­கள் பயன்­பாட்­டுக்­கா­கத் திறந்து வைத்­தார். இத­னைத் தொடர்ந்து, மாந­க­ராட்­சி­யில் பணி­வாய்ப்­பினை வழங்­கும் வகை­யில், 559 பேருக்கு பணி நிய­மன ஆணை­களை வழங்கி

வாழ்த்­திப் பேசி­னார்.

அப்­போது அவர், `கழக அர­சின் பங்­க­ளிப்­பைத் தவிர்த்­து­விட்டு, சென்னை மாந­க­ரின் வளர்ச்சி வர­லாற்றை எழு­திட முடி­யாது! சென்­னைக்­குப் பெய­ரிட்டு வளர்த்­தெ­டுத்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் வழி­யில், மேய­ராக ‘சிங்­கா­ரச் சென்னை’ தந்து மேம்­ப­டுத்­தி­ய­வர் நம் கழ­கத்­த­லை­வர். இன்­றைக்கு மாண்­பு­மிகு முத­ல­மைச்­ச­ராக ‘சிங்­கா­ரச் சென்னை 2.o’ மூலம், சென்­னை­யின் வளர்ச்­சியை உலக நாடு­களே வியக்­கின்ற வகை­யில் அடுத்­த­கட்­டத்­துக்கு எடுத்­துச் சென்று கொண்­டி­ருக்­கி­றார்­கள்’ என்று குறிப்­பிட்­டார்.

விழா­வின்­போது அவர் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:

சென்னை மாந­க­ராட்­சி­யின் சார்­பாக, நடக்­கின்ற இந்­தச் சிறப்­புக்­கு­ரிய நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று, ரூபாய் 30 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பணி நிறை­வு­பெற்ற 17 பணி­களை மக்­கள் பயன்­பாட்­டிற்­குத் திறந்து வைப்­ப­தி­லும், ரூபாய் 280 கோடி ரூபாய் மதிப்­பீட்­டி­லான 500 பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டு­வ­தி­லும், 600 பேருக்கு பணி நிய­மன ஆணை­களை வழங்­கு­வ­தி­லும், மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன். பெருமை அடை­கி­றேன்.

சென்னை பெரு­மழை

சமீ­பத்­தில், சென்­னை­யில் இரண்­டு­முறை பெரும் மழை வந்­தது. ஒரு புய­லும் அடித்­தது. மழைச் சீற்­றத்­தி­லும் மக்­க­ளுக்கு எந்­த­வித பாதிப்­பும் ஏற்­ப­டாத வகை­யில், நம் கழக அரசு சிறப்­பா­கச் செயல்­பட்­டது. அதற்கு அமைச்­சர் நேரு அண்­ணன் அவர்­க­ளுக்கு வாழ்த்­து­க­ளை­யும், பாராட்­டு­க­ளை­யும், நன்­றி­க­ளை­யும் சென்னை மக்­கள் சார்­பாக தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

நம் தலை­வர், மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் எப்­போ­துமே சொல்­வார். அண்­ணன் நேரு அவர்­க­ளி­டம் ஒரு பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்­டால், அது ஏற்­க­னவே 50 சத­வி­கி­தம் வெற்றி என்று. அதன்­படி, மழை வெள்ள காலத்­தில் சிறப்­பா­கச் செயல்­பட்­ட­தற்கு மீண்­டும் பாராட்­டு­க­ளை­யும், நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

வந்­தாரை வழ­வைக்­கும் சென்னை

குறிப்­பாக, சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள், பணி­யா­ளர்­கள் மிகச்­சி­றப்­பாக பணி­களை மேற்­கொண்டு பாதிப்­பு­க­ளைத் தவிர்த்­தீர்­கள். அதற்கு என் பாராட்­டு­களை மீண்­டும், மீண்­டும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். சென்னை என்­றாலே, நாம் அனை­வ­ருக்­கும் மன­தில் வரும் வாக்­கி­யம் என்­ன­வென்­றால், வந்­தாரை வாழ­வைக்­கும் சென்னை என்று சொல்­வார்­கள். பல­ரின் வாழ்க்­கைத் தரத்­தையே ஒரு நக­ரம் உயர்த்தி இருக்­கி­றது.

சென்­னை­யின் வர­லாறு

`சென்­னப்­பட்­டி­னம்’ என்ற ஒரு கிரா­மம், இன்­றைக்கு எல்­லோ­ருக்­கு­மான மாந­க­ர­மாக மாறி இருக்­கி­றது என்­றால், அதற்கு ஒரு வர­லாறு இருக்­கி­றது. இந்த வர­லா­றுக்­குப் பின்பு தவிர்க்­க­மு­டி­யாத பெயர்­க­ளும் இருக்­கி­றது. அந்த பெயர்­கள்­தான் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளும், நம் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­க­ளும்­தான்.

பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் நம் மாநி­லத்­திற்கு `தமிழ்­நாடு’ என்று பெயர் வைத்­தார். அவ­ரின் தம்பி முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்­தான் நம் மாந­க­ருக்கு `சென்னை’ என்று பெயர் வைத்­தார். சென்­னை­யின் வளர்ச்­சிக்கு அன்­றைக்­கும் சரி, இன்­றைக்­கும் சரி, என்­றைக்­கும் நம் கழக அரசு ஏரா­ள­மான திட்­டங்­க­ளைத் தொடர்ந்து செயல்­ப­டுத்­திக்­கொண்­டு­தான் இருக்­கி­றோம்.

திட்­டங்­கள் மேம்­பா­லங்­கள்

சென்­னை­யில் முதன்­மு­த­லில் மேம்­பா­லத்­தைக் கட்­டி­யது கலை­ஞர் ஆட்­சிக் காலத்­தில்­தான். முதல் மேம்­பா­லம் மட்­டு­மல்ல இங்கு இருக்­கின்ற அத்­தனை மேம்­பா­லங்­க­ளும் நம் கழக ஆட்­சி­யில் கட்­டப்­பட்ட மேம்­பா­லங்­கள்­தான்.

ஐ.டி நிறு­வ­னங்­கள்

சென்­னை­யில் டைடல் பார்க் மற்­றும் ஐ.டி கார்­னர் கொண்டு வந்து ஐ.டி துறை­யில் சென்­னையை முதன்மை மாநி­ல­மாக்க வழி­வகை செய்­தது நம் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் ஆட்­சி­யில்­தான்.

சென்­னைக்கு செம்­மொ­ழிப் பூங்கா, மெட்ரோ இர­யில் போன்ற பல திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­த­தும், நம் கழக அர­சு­தான். எல்­லோ­ருக்­கும் எல்­லாம் என்ற நம் திரா­விட மாடல் ஆட்­சி­யின் அடிப்­ப­டை­போல, சென்னை எல்­லோ­ருக்­கும் எல்­லா­வற்­றை­யும் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றது.

சிங்­கா­ரச் சென்னை- 2.0

சென்­னை­யின் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் மேய­ராக இருந்­த­வர் நம் மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள். சிங்­கா­ரச் சென்­னைக்­குப் பிறகு மாண்­பு­மிகு முத­ல­மைச்­ச­ரின் சிங்­கா­ரச் சென்னை- 2.0 என்ற மாபெ­ரும் கனவு தற்­போது சாத்­தி­யப்­பட்டு வரு­கி­றது.

குறிப்­பாக, சென்­னை­யின் சீரான வளர்ச்­சியை உறு­தி­செய்ய, வட­சென்னை வளர்ச்­சித் திட்­டத்தை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் ரூபாய் 6,000 கோடி மதிப்­பீட்­டில் செயல்­ப­டுத்­திக்­கொண்டு இருக்­கி­றார்.

கட்­ட­மைப்பு வச­தி­கள் மேம்­பாடு, பழமை வாய்ந்த கட்­ட­டங்­கள் புன­ர­மைப்பு, சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு மேம்­பாடு, நக­ரின் பசு­மைப் பாது­காப்பு, நீர்­நி­லை­கள் புன­ர­மைப்பு, நிலத்­தடி நீர்ச் சேமிப்பு, சுற்­று­லாவை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை என்று பல விஷ­யங்­கள் சென்­னை­யில் நடந்­துக்­கொண்டு இருக்­கின்­றன.

இன்­றைக்கு `ஹேப்­ப­னிங் சிட்டி’ என்ற வார்த்தை ஆங்­கி­லத்­தில் உண்டு. அதற்கு ஏற்­ற­மா­திரி சென்னை, இன்­றைக்கு ஒரு ஹேப்­ப­னிங் சிட்­டி­யாக மாறிக்­கொண்டு இருக்­கி­றது.

பூங்­காக்­கள்

மக்­க­ளுக்­குத் தேவை­யான எல்­லா­வற்­றை­யும் தனக்­குள் சென்னை வைத்து இருக்­கி­றது. மக்­கள் நடப்­ப­தற்­கான நடை­பாதை வச­தி­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள், பூங்­காக்­கள் என்று பல இடங்­க­ளில் அமைத்து இருக்­கி­றோம்.

குழந்­தை­கள் விளை­யாட சூழல், பிள்­ளை­கள் விளை­யாட்­டுப் பயிற்சி எடுப்­ப­தற்­கான வாய்ப்பு என்று எல்­லாம் இன்று ஒரே இடத்­தில் கிடைக்­கின்­றன. சிங்­கா­ரச் சென்னை 2.0 என்ற திட்­டத்­தின்­கீழ் கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் மட்­டும் ஆயி­ரத்து பன்­னி­ரண்டு பணி­கள் ரூபாய் 901 கோடி மதிப்­பீட்­டில் முடிக்­கப்­பட்டு, மக்­கள் பயன்­பாட்­டிற்கு அர்­ப­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் திட்­டங்­க­ளின் தொடர்ச்­சி­யா­கத்­தான், இன்­றைக்கு வேளச்­சேரி, தாம்­ப­ரம் பிர­தான சாலை­க­ளில் உள்ள மேம்­பா­லத்­தின் கீழ்ப்­ப­குதி மற்­றும் கண்­ணகி நகர் ஆகிய இடங்­க­ளில் இரண்டு புதிய பூங்­காக்­கள் திறக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

எழில் நகர், கண்­ணகி நகர் மற்­றும் அம்­பத்­தூர் உள்­ளிட்ட 8 இடங்­க­ளில் புதிய விளை­யாட்­டுத் திடல்­கள் திறக்­கப்­பட்டு இருக்­கின்­றன. இன்­றைக்கு ஒட்­டு­மொத்­த­மாக 17 பணி­கள் ரூபாய் 30 கோடி மதிப்­பீட்­டில் முடிக்­கப்­பட்டு, மக்­கள் பயன்­பாட்­டிற்­காக திறந்து இருக்­கி­றோம்.

அடிக்­கல் நாட்­டு­தல்

அது­மட்­டு­மில்­லா­மல், இன்­றைக்கு 280 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 493 பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டப்­பட்டு இருக்­கி­றது. சென்­னை­யில் 225 குளங்­கள் ஏற்­க­னவே இருக்­கின்ற நிலை­யில், மேலும், புதி­தாக 41 குளங்­களை உரு­வாக்­கும் பணி­க­ளில் மாந­க­ராட்சி ஈடு­பட்டு இருக்­கி­றது.

நீர் நிலை­கள் சீர­மைப்பு

நீர்­நி­லை­கள் சீர­மைப்­பில் கவ­னம் செலுத்­தி­ய­தின் கார­ணத்­தால்­தான் சமீ­பத்­தில் 15 சென்டி மீட்­டர் மழை பெய்­தும் பெரிய பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை. மழை­நீர் வடி­கால்­க­ளைச் சீர் செய்து, மழை நீர் தேங்­கு­வ­தைத் தடுப்­பது ஒரு பக்­கம் இருந்­தா­லும், மறு­பக்­கம் அந்த தண்­ணீ­ரைத் தேக்கி நிலத்­தடி நீரை உயர்த்­தும் கவ­னத்­தை­யும் நாம் செலுத்­திக்­கொண்டு இருக்­கி­றோம்.

இந்த மாதி­ரி­யான பணி­க­ளின் மூல­மா­கவே, இந்த ஆட்­சி­யின் நோக்­கம் என்ன என்று எல்­லோ­ருக்­கும் புரிந்­தி­ருக்­கும். இன்­னும் சென்­னையை வளர்க்க வேண்­டும் என்­ப­து­தான் நம் அனை­வ­ரின் ஒரே எண்­ணம்.

பணி நிய­மன ஆணை

இன்­றைய நிகழ்ச்சி மூல­மாக, பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் பணி புரிந்து பணிக் காலத்­தின் போது கால­மான அலு­வ­லர்­கள், பணி­யா­ளர்­கள் குடும்­பத்­தின் துயர் துடைக்­கும் வித­மாக, 106 நபர்­க­ளுக்கு கருணை அடிப்­ப­டை­யில் பணி நிய­மன ஆணை வழங்­கப்­பட இருக்­கி­றது.

கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளில் மட்­டும், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில், 847 வாரி­சு­தா­ரர்­க­ளுக்கு கருணை அடிப்­ப­டை­யில் பணி நிய­மன ஆணை வழங்கி இருக்­கி­றோம்.

சென்னை மாந­க­ராட்­சிக்கு உட்­பட்ட சுகா­தார மையங்­க­ளில் மருத்­துவ அலு­வர்­கள், சிறப்பு மருத்­துவ அலு­வ­லர்­கள், மருத்­துவ சார் பணி­யா­ளர்­கள் மற்­றும் 453 பணி­யா­ளர்­கள் ஒப்­பந்த முறை­யில் தேர்வு செய்­யப்­பட்டு, அவர்­க­ளுக்­குப் பணி நிய­மன ஆணை­களை இன்று வழங்க இருக்­கி­றோம். உங்­கள் அத்­த­னைப்­பே­ருக்­கும் எனது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

சிங்­கா­ரச் சென்னை-2.0 மக்­க­ளுக்­கா­னது, எல்­லோ­ருக்­கு­மா­னது, எல்­லோ­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­து­தான். ஆகவே, எல்­லோ­ரும் இணைந்து சென்­னையை இன்­றும் பல உய­ரங்­க­ளுக்கு எடுத்­துச் செல்­வோம் என்று சொல்லி, இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.

இவ்­வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசி­னார்.

பங்­கேற்­ற­வர்­கள்

அமைச்­சர்­கள் கே.என்.நேரு, ப।ி.கே.சேகர்­பாபு, தா.மோ.அன்­ப­ர­சன், மா.சுப்­ர­ம­ணி­யன், சென்னை மாந­க­ராட்சி மேயர் பிரியா ராஜன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இ்.பரந்­தா­மன், தாய­கம் கவி, மயிலை த.வேலு, ஆர்.டி.சேகர், ஐடீ­ரீம்ஸ் மூர்த்தி, மாத­வ­ரம் சுதர்­ச­னம், எபி­னே­சர், ஜோசப் சாமு­வேல், வெற்­றி­ய­ழ­கன், அர­விந்த் ரமேஷ், மருத்­து­வர் எழி­லன், பிர­பா­கர்­ராஜா, காரம்­பாக்­கம் கண­பதி, துணை­

மே­யர் மகேஷ்­கு­மார், மாந­க­ராட்சி மாமன்ற ஆளுங்­கட்­சித் தலை­வர் இரா­ம­லிங்­கம், நிலைக்­கு­ழுத் தலை­வர்­கள் க.தன­சே­க­ரன், விஸ்­வ­நா­தன், டாக்­டர்.சாந்­த­கு­மாரி, இளைய அருணா, சிற்­ற­ரசு, சர்­பத ஜெய­தாஸ், ராஜா அன்­ப­ழ­கன், சொ.வேலு,

நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை முதன்­மைச் செய­லா­ளர் முனை­வர் கார்த்­தி­கே­யன் ஐ.ஏ.எஸ்., மாந­க­ராட்சி ஆணை­யர் கும­ர­கு­ரு­ப­ரன் ஐ.ஏ.எஸ்., கூடு­தல் ஆணை­யர் டாக்­டர்.ஜெயச்­சந்­திர பானு ரெட்டி, இணை ஆணை­யர் முனை­வர் விஜ­ய­ராணி ஐ.ஏ.எஸ்., துணை ஆணை­யர்­கள் சிவ­கி­ருஷ்­ண­மூர்த்தி ஐ.ஏ.எஸ்., பிரித்­தி­வி­ராஜ் ஐ.ஏ.எஸ்., வட்­டார துணை ஆணை­யர் ரவி­தேஜா ஐ.ஏ.எஸ்., குடி­நீர் வழங்­கல் வாரிய மேலாண்மை இயக்­கு­நர் வினய் ஐ.ஏ.எஸ்., குடி­நீர் வழங்­கல் வாரிய செயல் இயக்­கு­நர் சர­வ­ணன் ஐ.ஏ.எஸ்., மற்­றும் மண்­ட­லக் குழுத் தலை­வர்­கள், மாமன்ற உறுப்­பி­னர்­கள், அரசு அதி­கா­ரி­கள்,

அலு­வ­லர்­கள் உள்­பட பலர் கலந்­து­கொண்­ட­னர்.


Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்