பேரவையில் ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம்! ஒருமனதாக நிறைவேறியது!

மதுரை மாவட்­டத்­தில் டங்ஸ்­டன் சுரங்க உரி­மையை உடனே ரத்து செய்ய வேண்­டும்’’ என்று சட்­டப்­பே­ர­வை­யில் ஒன்­றிய அரசை வலி­யு­றுத்தி அவை முன்­ன­வ­ரும் நீர்­வளத்­ துறை அமைச்­ச­ரு­மான துரை­மு­ரு­கன் அவர்­கள் அர­சின் சார்­பில் தனித் தீர்­மா­னம் கொண்டு வந்து முன்­மொ­ழிந்­தார். பின்­னர் இத்­தீர்­மா­னம் பேர­வை­யில் ஒரு­ம­ன­தாக நிறை­வே­றி­யது.

சட்­டப்பேர­வை­யில் நேற்று நீர்­வ­ளத் துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவர்கள் முன்­மொ­ழிந்த தீர்­மா­னம் வருமாறு :–

“மதுரை மாவட்­டம், மேலூர் வட்­டம், நாயக்­கர்­பட்டி கிரா­மத்­தில் டங்ஸ்­டன் கனி­மச் சுரங்­கம் அமைப்­ப­தற்­கான உரி­மத்தை இந்­துஸ்­தான் ஜிங்க் லிமி­டெட் நிறு­வ­னத்­திற்கு ஒன்­றிய அரசு வழங்­கி­யுள்­ளது. இத்­த­கைய இன்­றி­ய­மை­யாத

மற்­றும் முக்­கி­யக் கனி­மங்­க­ளுக்­கான உரி­மங்­களை மாநில அர­சு­க­ளின் அனு­ ம­தி­யின்றி, ஒன்­றிய அரசு ஏலம் விடக்­ கூடாது என்று கடந்த 3.10.2023 அன்று, தமிழ்­நாடு அரசு வலி­யு­றுத்­தி­யி­ருந்­தும், இந்த எதிர்ப்­பைக் கருத்­தில் கொள்­ளாது, ஒன்­றிய அரசு இத்­த­கைய ஏல நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது கண்­டிக்­கத்­தக்­கது.

தமிழ்­நாட்டு மக்­கள் ஒரு­போ­தும் ஏற்க மாட்­டார்­கள்!

இந்த டங்ஸ்­டன் உரி­மம் வழங்­கப்­பட்ட பகு­தி­யா­னது, குடை­வ­ரைக் கோயில்­கள், சம­ணச் சின்­னங்­கள், தமிழ்ப் பிராமி வட்­டெ­ழுத்­துக்­கள், பஞ்­ச­பாண்­ட­வர் படு­கை­கள் போன்ற பல வர­லாற்­றுச் சின்­னங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­க­வும், அரி­ய­வகை உயி­ரி­னங்­க­ளின் வாழ்­வா­தா­ர­மா­க­வும் இருப்­ப­தைக் கருத்­தில் கொண்டு, இப்­ப­குதி ஒரு பல்­லு­யிர்ப் பெருக்­கத் தல­மாக, கடந்த 2022–ஆம் ஆண்டு தமிழ்­நாடு அர­சால் அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தைச் சுட்­டிக்­காட்­டிய நிலை­யி­லும், அப்­ப­கு­தி­யில் சுரங்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான உரி­மம் ஒன்­றிய அர­சால் அளிக்­கப்­பட்­டுள்­ளதை, தமிழ்­நாடு அர­சும், தமிழ்­நாட்டு மக்­க­ளும், ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்­ள­மாட்­டார்­கள்.

எதிர்த்து 1360 போராட்­டங்­கள்!

இப்­ப­கு­தி­யில் வாழும் மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் நிரந்­த­ர­மா­கப் பாதிக்­கப்­ப­டும் என்ற அச்ச உணர்வை ஒன்­றிய அர­சின் இந்த நட­வ­டிக்கை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தால், அப்­ப­குதி மக்­கள் இதனை எதிர்த்து 1360 போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். இவை அனைத்­தை­யும் கருத்­தில் கொண்டு, இப்­ப­கு­தி­யை­யும், இப்­ப­கு­தி­யில் வாழும் மக்­க­ளை­யும் பாது­காக்­கும் பொருட்டு, இந்­துஸ்­தான் ஜிங்க் லிமி­டெட் நிறு­வ­னத்­திற்கு டங்ஸ்­டன் கனி­மச் சுரங்க ஒப்­பந்­தம் வழங்­கிய ஒன்­றிய அர­சின் நட­வ­டிக்­கை­யைக் கைவி­டு­மாறு முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்­தி­யப் பிர­த­மர் அவர்­களை ஏற்­கெ­னவே வலி­யு­றுத்­தி­யுள்­ளார்­கள்.

இந்­தச் சூழ்­நி­லை­யில், மதுரை மாவட்­டம், மேலூர் வட்­டம், நாயக்­கர்­பட்டி கிரா­மத்­தில் இந்­துஸ்­தான் ஜிங்க் லிமி­டெட் நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்ட டங்ஸ்­டன் சுரங்க உரி­மத்தை உட­ன­டி­யாக இரத்து செய்­தி­ட­வும், மாநில அர­சு­க­ளின் அனு­ம­தி­யின்றி எந்­தச் சுரங்க உரி­மத்­தை­யும் வழங்­கக் கூடாது என்­றும், ஒன்­றிய அரசை வலி­யு­றுத்தி இந்­தப் பேரவை ஒரு­ம­ன­தாக தீர்­மா­னிக்­கி­றது.”

இவ்­வாறு தீர்­மா­னத்தை முன்­ மொ­ழிந்து நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவர்­கள் பேசி­னார்.

அனைத்­துக் கட்­சி­யி­ன­ரும் வர­வேற்பு!

இத்­தீர்­மா­னத்­தின் மீது சட்­ட­மன்­றத்­தில் அனைத்­துக்­கட்­சி­யி­ன­ரும் வர­வேற்று பேசி­னர்.அ.தி.மு.க.– எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் அரசு கொண்­டு­வந்த தனித் தீர்­மா­னத்தை வர­வேற்­ப­தாக கூறிட பேர­வை­யில் தீர்­மா­னம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.– இத்தீர்­மா­னத்­தின் மீது சட்­ட­மன்ற கட்­சித் தலை­வர்­கள்,- உறுப்­பி­னர்­கள் ­தமிழ்­நாடு வாழ்­வு­ரி­மைக் கட்­சித் தலை­வர் வேல்­மு­ரு­கன், கொங்கு நாடு ஈஸ்­வ­ரன், மனித நேய மக்­கள் கட்சி­ அப்­துல்­ச­மது, ம.தி.மு.க. சதன்­ திரு­ம­லைக்­கு­மார், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி மாரி­முத்து, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி சின்­ன­துரை, விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி சிந்­த­னைச் செல்­வன், பா.ஜ.க. நைனார் நாகேந்­தி­ரன், பா.ம.க. ஜி.கே.மணி, காங்­கி­ரஸ் அசோ­கன், எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி ஆகி­யோர் பேசினர்.

இதை­ய­டுத்து இத்­தீர்­மா­னம் ஒரு­ம­ன­தாக நிறை­வே­றி­ய­தாக பேர­வைத் தலை­வர் மு.அப்­பாவு அவர்கள் அறி­வித்­தார்.


Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்