Posts

Showing posts from March, 2025

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும், இந்தி ஆதிக்க எதிர்ப்பின் அவசியம் குறித்த ஆறாவது மடல்.

Image
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும், இந்தி ஆதிக்க எதிர்ப்பின் அவசியம் குறித்த ஆறாவது மடல். எந்த மொழி மீதும் தமி­ழர்­க­ளுக்கும் தமிழ்­நாட்­டிற்­கும் தனிப்­பட்ட வெறுப்பு ஒரு போதும் இருந்­த­தில்லை. எந்த மொழி­யா­வது திணிக்­கப்­பட்­டால் தமிழ்­நாடு போராட்­டக் களம் காணா­மல் இருந்­த­தில்லை, தேசிய கல்­விக் கொள்கை வழி­யாக மும்­மொ­ழித் திட்டம் என்ற பெய­ரில் இந்­தி­யைத் திணிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் சதி­யினை உணர்ந்­து­தான் ஒட்­டு­மொத்த தமிழ்­நா­டும் அதனை எதிர்க்­கி­றது. தமி­ழுக்­கும் தமி­ழர்­க­ளுக்­கும் எதி­ரா­கவே என்­றென்­றும் சிந்­திப்­ப­தை ­யும், தமிழ்­நாட்­டைத் தொடர்ந்து வஞ்­சிப்­பதை­யுமே தனது கொள்­கை­யா­கக் கொண்­டி­ருக்­கிற பா.ஜ.க. ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜெண்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆத­ரித்து பேசிக் கொண்­டி­ருப்­பார்­கள். மாண்­பு­மிகு ஆளு­நர் ஆர்.என்.ரவி அது போலப் பேசி­யி­ருப்­பது புதி­ய­து ­மல்ல, பொருட்­ப­டுத்த வேண்­டி­ய­து­மல்ல. ஆடு நனை­கி­றதே என்று ஓநாய் அழுத கதை­யாக, தமிழ்­நாட்­டின் இரு­மொ­ழ...