Posts

Showing posts from February, 2025

நம் உயி­ரு­டன் கலந்­தி­ருக்­கும் தலை­வர் கலை­ஞ­ரின் அன்பு உடன்­பி­றப்­பு­க­ளுக்கு உங்­க­ளில் ஒரு­வன் எழு­தும் மொழிப் போர்க்­க­ளம் குறித்த நான்­கா­வது மடல்.

Image
இனத்­தை­யும் மொழி­யை­யும் காக்­கும் போராட்­டக் களம் என்­றால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆளுங்­கட்­சி­யாக இருந்­தா­லும், எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும் எப்­போ­தும் முதன்­மை­யாக நிற்­கும். 1949 செப்­டம்­பர் 17 அன்று தி.மு.க. தொடங்­கப்­பட்டு, மறு­நாள் சென்னை ராய­பு­ரம் ராபின்­சன் பூங்­கா­வில் நடந்த முதல் பொதுக்­கூட்­டத்­தில் கொட்­டும் மழை­யில் கூடி நின்ற தமிழ் மக்­க­ளி­டம் உரை­யாற்­றிய பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், “பெரி­யாரே.. நீங்­கள் அளித்த பயிற்­சிப் பக்­கு­வம் பெற்ற நாங்­கள், உங்­கள் வழி­யி­லேயே சர்க்­காரை எதிர்த்து சிறைச்­சாலை செல்­லத்­தான் வேண்­டு­கோள் விடுக்­கி­றோம். தொடக்க நாளா­கிய இன்றே!” என்று அறி­வித்­தார். தி.மு.கழ­கம் பிறந்­தது முதல் இந்த 75 ஆண்­டு­க­ளாக சந்­திக்­காத களம் இல்லை. எதிர்­கொள்­ளாத அடக்­கு­மு­றை­கள் கிடை­யாது. வழக்­கு­கள், சிறை­வா­சம், உயிர்த்­தி­யா­கம் எல்­லா­வற்­றை­யும் தாங்­கித்­தான் தாய்­மொ­ழி­யாம் தமி­ழை­யும் தமி­ழர்­க­ளின் உரி­மை­யை­யும் காக்­கின்ற மகத்­தான இயக்­க­மா­கத் திகழ்­கி­றது. அத­னால்­தான், தி.மு.க ஒரு போராட்­டத்­தைக் கையில் எடுத்­தால் இந்­தி­யாவை...